Advertisment

"சம்பளமே வேண்டாம்..." பிரபல இயக்குநரின் கதைக்கு ஓகே சொன்ன விஜய் சேதுபதி!

vijaysethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துவருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.

Advertisment

இந்த நிலையில், இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாக்யராஜ், ஒரு குறும்படத்திற்கான கதையை விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார். அந்தக் கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப்போனதால், உடனே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதே பாணியில் இன்னும் சில கதைகளை உருவாக்கிவிட்டு ஆந்தாலஜி வகை படமாக இப்படத்தை எடுக்க இயக்குநர் கே.பாக்யராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்க தனக்கு எந்த விதமான சம்பளமும் வேண்டாம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

vijaysethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe