Skip to main content

“ஸ்கெட்ச் போட்டு தூக்குகிற கூட்டத்தில் நானும் இருந்தேன்”-விஜயகுமாரின் அரசியல் பின்னனி

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

உறியடி 2 ஆம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட உறியடி படங்களின் இயக்குனரும், நடிகருமான விஜயக்குமாரிடம், உறியடி முதல் பாகத்தில் சாதிய பிரச்சனைகளைப் பேசியிருப்பீர்கள், நேரடியாக உங்களுக்கு சாதியத்தால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கிறதா என்று கேட்டபோது அவர் கூறியவை...

 

vijayakumar speech about cast issues

 

இங்கு நான் என்பது என்ன என்பதே கேள்வியாக இருக்கு. நான் என்னை மட்டும் நான் என பார்க்கவில்லை. என்னைச் சுற்றி இருக்கிறவர்களையும் நானாகத்தான் பார்க்கிறேன். நான் காலேஜில் படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருந்தார்கள், அவர்கள் எல்லோரும் நான் தான். அவர்கள் அப்படியெல்லாம் செய்தார்கள். ஹாஸ்டலில் ரேண்டமாக ரூம்கள் கொடுத்தாலும் இவர்களாக ரூமை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் இருந்த சூழல் அப்படி மாற்றவைக்கிறது. ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போகும்பொது அங்கு நடக்கின்ற விஷயங்கள் நாமெல்லாம் ஒன்னுங்கிறது ஹாஸ்டலுக்கு உள்ள மட்டும்தான் வெளியே இல்லை என்பதை நிறைய உணர்த்தியது. 
 

எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு முன்புவரை சாதி என்பது தனிமனிதனின் விருப்பு வெருப்புகளோடு அடங்கியிருந்தது. பொண்ணுக் கொடுத்து பொண்ணு எடுக்கிறது, வீட்டுக்கு வருவது போவது என்பது போன்ற விஷயங்களில் இருந்தது. காலப்போக்கில் காதல் திருமணங்களாலும் நண்பர்களாலும் அந்த சாதி உணர்வுகள் குறைவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால், இப்போது நாம் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இந்தமுறை செயற்கையாக சாதி வெறி ஊட்டப்படுகிறது. இந்த சாதியை வைத்து மக்களை பிரித்து, அதை வாக்கு வங்கியாக மாற்ற நினைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவங்க இருக்கிறவரைக்கும் எப்படி சாதி ஒழியும்? சாதி ஒழிந்துவிட்டால் அவர்கள் எதைவைத்து வியாபாரம் செய்வார்கள்? எப்படி சீட் வாங்குவார்கள்? எப்படி ஓட்டு வாங்குவார்கள்? அதனால், இவர்கள் இருக்கிறவரைக்கும் சாதி ஒழியாது.

 

இப்போது, ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் என எல்லாவற்றிலும் சாதி உணர்வை அப்கிரேடு பண்ணிட்டாங்க. இளைஞர்களுக்கும், சின்னப்பசங்களுக்கும் விவேகத்தைவிட வேகம் அதிகமாக இருக்கும், எதையாவது செய்யவேண்டும் என்ற வேகம் இருக்கும். அந்தமாதிரியான இளைஞர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, அந்த இளைஞர்களுக்கு இந்த வாக்கு வங்கி அரசியலை சொல்லிக்கொடுக்கணும், அதை என் கடமையாக நினைத்தேன். ஏனென்றால், நானும் அப்படிப் பட்ட மாணவன் தான். ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு எப்போ எவன் சிக்குவான், பிரச்சனை பண்ணலாம்னு சுத்தின பசங்களில் நானும் ஒருத்தன். எங்க காலேஜ் உள்ளே ஸ்கெட்ச் போட்டு தூக்குகிற அளவுக்கு அரசியல் வந்துச்சு, நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன். அதனால், அந்தமாதிரி இருக்க பசங்களுக்கு இதனுடைய வீரியத்தை எடுத்து சொல்லணும் என்பதுதான் என் நோக்கம்.
 

லட்டர் பேடு கட்சி என்ற ஒரு வார்த்தை இருக்கும், 5%, 10% ஓட்டு வச்சுருக்காங்க என்று கிண்டல் செய்வோம், அந்த மாவட்டத்தை விட்டு வெளியில் அந்தக் கட்சி தெரியாமல்கூட இருக்கும். ஆனால், அவர்கள்தான் பவர்ஃபுல். மக்கள் எப்பவுமே இரண்டு பிராதான கட்சிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகிற மனநிலையில் தான் இருக்கிறார்கள். நிறைய தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருப்பார்கள். அப்போது வெற்றியை நிர்ணையிப்பது 10,000 அல்லது 15,000 வாக்குகளை வைத்திருக்கிற இவர்கள்தான். இவர்களுக்குள் ஒற்றுமையை விடவே மாட்டார்கள், அப்படி ஒற்றுமை போனால் கொலுத்திப்போடுவார்கள், ஒற்றுமை வரும், அது வாக்காக மாறும்.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாதி ஒழிப்பு அமைப்பினர் சார்பில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

 

இன்று (23-12-2021) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சாதி ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற பலரும் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்தில் அதிகரிக்கும் சாதி ஆணவக் கொலைகள் மற்றும் சாதி வெறுப்பு குற்றங்களை தடுக்க உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


 

Next Story

புயலுக்கு தெரியுமா சாதீ…?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

டெல்டா மாவட்டங்களையும், அதன் அருகே இருக்கும் சில மாவட்டங்களிலும் கோர தாண்டவம் ஆடிச் சென்றிருக்கிறது கஜா புயல். உயிர்சேதம், பொருட்சேதம் என பல துயரங்களை சந்தித்துள்ள அந்த மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.

 

kaja

    
சோறு போட்ட விவசாயி இன்று பட்டினியாய் கிடப்பதை பார்க்க சகிக்காத பலர், பிஸ்கட், ரொட்டி, துணிமணி, நாப்கின் என தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை, கிராமத்தினர் சில இடங்களில் மறித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். சில இடங்களில் தங்களுக்கு தேவை போக, மற்ற ஊர்களுக்கு திருப்பிவிடுகின்றனர்., அந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என வழியும் சொல்லிவிடுகின்றனர்.

  

kaja

 

ஆனால், ஒரு சில இடங்களில் நிவாரண பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் முதலிலும், காலனி தெரு (தலித் மக்கள் வசிப்பிடம்) அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது பெரும்பான்மை மக்களின் வீடுகள் முதலில் இருப்பதால், அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள். காலனி மற்றும் சேரிப்பகுதிக்கு இந்த பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சேரி மக்கள் வசிக்கும் பகுதி, விளம்பர தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களிலும், சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 

    
இருந்ததை எல்லாம் இழந்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது கஜா புயல். அந்த புயலுக்கு தெரியுமா? இவர்கள் இன்ன சாதி என்று. புயலை பொறுத்தவரை எல்லோரும் ஒன்று தான். அதுபோல் எல்லோரும் ஓரினம் என்ற எண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவது எப்போது.?