Skip to main content

'நம்ம ஆளுங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்' - விஜய் எடுத்த திடீர் முடிவு

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார். மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.

 

vijay

 

மேலும் பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் தான் காரணம் எனவும், 'நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்' என்று அவர் சொன்னதால்தான் சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் அட்லீ?

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

director atlee joining vijay in next movie

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்நிலையில் 'தளபதி 68' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால், இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

''நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா'' - அட்லீ நெகிழ்ச்சி 

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் வெளியான தெறி படம் நேற்றோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அட்லீ - விஜய் கூட்டணியில் முதல் படமாக உருவான இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயரித்த இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனது குறித்து இயக்குனர் அட்லீ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

hfh

 

"தெறி எனக்குப் பிடித்தமான படம். என் இதயத்துக்கு நெருக்கமான படம். எல்லாவற்றுக்கும் விஜய் அண்ணாதான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா. எனக்கு இந்தச் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா. என் 'தெறி' குழுவுக்கு என் அன்புகள். தயாரிப்பாளர் தாணுவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.