vijay tirunelveli function update

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். மேலும் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்.

Advertisment

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisment

இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25000 என விஜய் வழங்கினார். அப்போது ஒரு பெண்ணிடம்நிதி வழங்கிய நிலையில், விஜய்யின் கையை பிடித்து முத்தமிட்டார். பின்பு ஒரு ரசிகை விஜய்யை பார்த்த குஷியில் துள்ளி குதித்து அவரின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தார். இது போன்று நிறைய மக்கள் விஜயைப் பார்த்ததும் எமோஷனல் ஆகிவிட்டனர்.

பின்பு மளிகை பொருட்கள் விஜய் வழங்கினார். அப்போது வாங்க வந்த பெண்மணி விஜயை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கையை மேலே உயர்த்தி துள்ளி குதித்தார். அப்போது அங்கிருந்த பலரும் ஆர்ப்பரித்தனர்.

Advertisment