கடந்த 2013ஆம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் வெளியாக மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். இவர் பாலு மகேந்திரா மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு துணை இயக்குனராக பணி புரிந்தவர்.

vijay with shanthanu

இவரின் முதல் படமான மதயானைக் கூட்டம் படத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறாமல்இருந்திருந்தார். இப்படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ்.

Advertisment

தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்க கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3de3b59c-7ee2-4569-8a55-9855e06fb562" height="197" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_4.jpg" width="441" />

மேலும் இப்படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு குறித்து அறிந்த நடிகர் விஜய் சாந்தனுவுக்கு, “வாழ்த்துகள் நண்பா... டைட்டில் செம” என்று மெஸேஜ் அனுப்பியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சாந்தனு.

Advertisment