Skip to main content

தளபதியா? தலைவனா? - அரசியல் வருகை குறித்து பேசிய விஜய் 

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

vijay talk about beast movie and political entry

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெறும். வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால் விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கான குட்டி ஸ்டோரியுடன் அரசியலையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார். அடுத்தநாள் அவரின் பேச்சுக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கும். ஆனால் அப்படியான நிகழ்வு பீஸ்ட் படத்திற்கு நடக்காத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

இது தொடர்பாக விஜய் அளித்த பேட்டியில்,"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கோவில் தர்கா, தேவாலயம் என அனைத்திற்கும் செல்வேன். எனக்கு எல்லாமே ஒண்ணுதான் என்றார். அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர். கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார். அப்பா கண்களுக்கு தெரிவார். இதுதான் அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

 

மகன் சஞ்சய் குறித்து பேசிய விஜய், "அவர் நடிக்க போகிறாரா,இல்லை கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. ஒரு நாள் பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் சஞ்சய்க்காக கதை சொல்ல வந்தார். அந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது. இத அவன் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். ஆனால் இதை அவன் கிட்ட சொன்னதற்கு இப்போது வேண்டாம் இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

 

இந்த பேட்டியில் தளபதி எப்போது தலைவனாக போகிறார் என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய், "என்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா இல்லை தலைவனாக மாறவேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும் தான் முடிவு செய்யவேண்டும். எனக்கு விஜய்யாக இருக்கத்தான் பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வருவது உறுதி என  சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.