Skip to main content

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் விஜய் - ‘பம்பாய் சிட்டி’ முதல் ‘நா ரெடி’ வரை

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

vijay special article about as singer

 

'கூகுள்.. கூகுள்.. பண்ணி பார்த்தேன் உலகத்துல..' என விஜய் தேடியது போல அவர் பாடிய பாடலையும் தேடி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இன்று அவரது பிறந்தநாள் விருந்தாக லியோ படத்தில் இருந்து 'நா ரெடி..' பாடல் வெளியாகிறது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரெடியாகி வரும் சமயத்தில் அவர் பாடகராகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளையும் நெருங்கவுள்ளார். அப்படி ரசிகர்களின் பிளேலிஸ்ட் முதல் யூட்யூபின் ட்ரெண்டிங் லிஸ்ட் வரை அவர் பாடிய முக்கியமான பாடல்களின் தொகுப்பை காண்போம். 

 

'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி...' (ரசிகன்) - 1994

 

vijay special article about as singer

 

1992-ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படம் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் தடம் பதித்த விஜய், பாடகராக 2 வருடங்கள் கழித்து தான் அறிமுகமாகிறார். குத்துப் பாடலாக அமைந்த பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. மேலும் அப்பாடல் திரையில் வருகையில் விஜய் அணிந்திருந்த டி-ஷர்ட் கலரான மஞ்சள் நிற எழுத்தில் 'இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய்' எனத் தோன்றியது. அதன் பிறகு தொடர்ந்து அவர் பாடிய சில பாடல்களில் இப்படி பெயர் போடுவது தொடர்ந்தது. அந்த சென்டிமென்ட் மீண்டும் 'லியோ' படத்தில் தொடர்கிறது. அவரது நாஸ்டால்ஜியா நினைவாக 'நா ரெடி' பாடலிலும் அதை பயன்படுத்தியுள்ளார்கள். 

 

'ஒரு கடிதம் எழுதினேன்...' (தேவா) - 1995

 

vijay special article about as singer

 

முதல் பாட்டு குத்துப் பாடலாக அமைந்த நிலையில் இரண்டாவது பாடல் மெலடி சாங்காக அமைந்தது. அக்காலகட்டத்தில் காதலர்களின் ஃபேவரட் சாங்காக இருந்தது. இன்றும் ரசிக்கக் கூடியதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதே படத்தில் 'ஐய்யயோ அலமேலு ஆவின் பசும்பாலு...' என்ற பாடலையும் பாடியிருப்பார்.

 

'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா...' - (விஷ்ணு) - 1995

 

vijay special article about as singer

 

இன்றைக்கும் நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா மலைக்கு போனால் இப்பாடல் நினைவு கூறாதே ஆட்களே இருக்க முடியாது. மேலும் லாரி ஓட்டுநர்களின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது. அதோடு பட்டிதொட்டி எல்லாம் விஜய்யை பாடகராக கொண்டு சேர்த்தது இப்பாடல். இப்பாடலுக்கு வலு சேர்த்து விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபாவின் குரல். 

 

'அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி...' - (காலமெல்லாம் காத்திருப்பேன்) - 1997

 

vijay special article about as singer

 

கானா இசையில் விஜய் பாடிய இப்பாடல் இளசுகளின் கொண்டாட்டத்திற்கு வித்திட்டது. மேலும் விஜய்யின் நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது. 

 

'ஊர்மிளா ஊர்மிளா...' - (ஒன்ஸ் மோர்) - 1997 

 

vijay special article about as singer

 

விஜய் சிம்ரனோடு இணைந்து வரும் பாடல் ஒன்ஸ்மோர் ரகமாக அமைந்தது. மீண்டும் தனது அம்மா ஷோபாவுடன் பாடிய இப்பாடல் காதலர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. மேலும் விஜய் - ஷோபா இணைந்தால் வெற்றி கூட்டணி என பெயர் பெற்றது. கிராமங்களில் மினி பஸ்களில் இந்த பாடல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

'ஓ...பேபி, பேபி...' - (காதலுக்கு மரியாதை) - 1997

 

vijay special article about as singer

 

இளையராஜா இசையில் விஜய் பாடிய இந்த பாடல், பாடலின் தலைப்புக்கேற்றவாறு பேபியின் குரல் போலவே மென்மையாக இருந்தது. மேலும் குழந்தைகளைத் தண்டி பெரியவர்களால் ரசிக்க கூடியதாக அமைந்தது. 

 

'நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து...' - (பெரியண்ணா) - 1999

 

vijay special article about as singer

 

இதுவரை தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய் முதல் முறையாக முன்னணி நடிகரான விஜயகாந்த், சூர்யா நடித்த இப்படத்தில் பாடினார். மேலும் விஜயகாந்த் மீது வைத்துள்ள மரியாதை காரணமாகவும் சூர்யா மீதுள்ள நட்பின் காரணமாக இப்பாடலை விஜய் பாடியுள்ளதாக அப்போது கூறப்பட்டது. சூர்யாவிற்கான குரலாக இந்த டூயட் பாடல் இடம்பெற்றது. 

 

'தங்க நிறத்துக்கு தான்...' - (நெஞ்சினிலே) - 1999

 

vijay special article about as singer

 

இந்தியாவை கூறு போட்டு விற்றுத் தீர்த்த பாடலாக அமைந்தது. பாடலின் வரிகள் அவ்வாறு அமைந்திருந்தது. விஜய்யின் குரலும் பாடலை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போனது. மீண்டும் தேவாவின் இசையில் விஜய் பாடிய இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு 'என்னோட லைலா...' (பத்ரி), 'உள்ளத்தை கிள்ளாதே...' (தமிழன்), 'கோகோ கோலா...' (பகவதி), 'வாடி வாடி...' (சச்சின்) உள்ளிட்ட பாடல்களைப் பாடி தேர்ந்த பாடகராகவும் வலம் வந்தார். 

 

vijay special article about as singer

 

2005ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த பாடலையும் பாடாத விஜய் மீண்டும் துப்பாக்கி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 'கூகுள்..கூகுள்' பாடல் மூலம் மீண்டும் பாடகர் விஜய்யாக ரசிகர்களை மகிழ்வித்தார். இதனைத் தொடர்ந்து 'வாங்கணா வணக்கங்கணா...' (தலைவா), 'கண்டாங்கி கண்டாங்கி...' (ஜில்லா), 'செல்ஃபி புள்ள...' (கத்தி), என படத்துக்கு ஒரு பாடலாவது பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

 

vijay special article about as singer

 

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய 'வெறித்தனம்...'(பிகில்) பாடல் ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்தது. மேலும் ஓப்பனிங் சாங்காக அமைந்தது ரசிகர்களை வெறித்தனமாக குத்தாட்டம் போட வைத்தது. பின்பு எல்லா மேடைகளிலும் அவர் குட்டி ஸ்டோரி பிரபலமானதை வைத்து 'குட்டி ஸ்டோரி' (மாஸ்டர்) பாடலை பாடினார். இப்படி பாடகராக தொடர்ந்த விஜய் பயணம் கடைசியாக 'ரஞ்சிதமே...' (வாரிசு) பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் நடனமாட வைத்தது. அதன் தொடர்ச்சியாக நா ரெடி...(லியோ) பாடலுக்கு அனைவரும் ரெடியாக உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.