நகைச்சுவை நடிகர் சூரி கடந்த 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் திறந்து வைத்தார்.இந்த உணவகத்துக்கு மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நடிகர் சூரி மேலும், இரண்டு புதிய உணவக கிளைகளை மதுரையில் திறந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
“அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்ற இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 1ஆம் தேதிகுத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
மேலும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்ட உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அன்றிரவே நடிகர் விஜய் சேதுபதியும் சூரியின் கடைக்கு வந்து சூரியை ஆச்சரியப்படுத்தினார். அப்போது அந்த கடைக்கு வந்த ரசிகர்களிடம் மொபைலை வாங்கி தானே செல்பி எடுத்தார்.ஒரு ரசிகர் தன் உறவினருடன் விடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாகக் கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத்தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயேசாப்பிட்டார் விஜய் சேதுபதி.