அட்லி- விஜய் மூன்றாவது முறையாக இணைந்து பணி புரிந்து வரும் படம் பிகில். இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான படம் அனைத்தும் வெற்றியடைந்துள்ளது. வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா வாஹினி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
முன்னதாக பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படமும், அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. ஆனால், இவ்விரு படங்களுமே ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
திருமாவளவன் அவர்கள் உடல்நலம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடியும் கூட விசாரித்தார். இதனை அரசியல் நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், திருமாவளவன் அரசியலைக் கடந்து நட்பு வைத்துள்ளவர். அதிமுக குறித்து எங்கள் தலைவர் அக்கறை காட்டக் காரணம், அவர்கள் பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை உடன் வைத்திருப்பதால் அதில் இருந்து வெளிவர பலமுறை கூறியுள்ளார். விசிகவும் இவர்கள் இருவரும் இருக்கும் கூட்டணியில் இடம் பெறாது எனவும் முன்பே அறிவித்திருந்தோம். ஏனென்றால், பாஜக எவ்வாறு மாநிலக் கட்சிகளின் முதுகில் பயணம் செய்து பின் அதன் தலையை வெட்டும் என்பதை மும்பை(ஏக்நாத் ஷிண்டே) விவகாரத்தில் பார்த்தோம். இந்த நிலையில் அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்து தான் ஒரு புரட்சித் தமிழன் என நிலைநாட்டி விட்டார் எடப்பாடி. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சமூகநீதி என்ற ஒரே கருத்தியலை பேசும் கட்சி என்பதால். பாஜக போன்ற சுமையை அதிமுக சுமக்க வேண்டுமா? என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தது.
அண்ணாமலை ஐ.டி. ரெயிடுகள் வரும் என சொன்னது உள்பட பல பிரச்சனைகள் இருக்கும் நிலையிலும், அதிலும், பா.ஜ.க. தேர்தல் ஆணையம் தொடங்கி அமலாக்கத்துறை வரை நெருங்கிய உறவு வைத்திருக்கும் போதும் எடப்பாடி கூட்டணியை முறித்தது பெரிய சமூகநீதி தான். இப்படி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு மேல், திருமாவளவன் கண்ட கனவும் இந்த கூட்டணி முறிவால் நிறைவேறிவிட்டது. இத்தனைக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க.தான் இரண்டாவது பெரிய கட்சி. இருந்தபோதிலும், இந்தியளவில் பெரும் கூட்டணி உடைப்பை எடப்பாடி ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக, தன்னுடன் இருந்த பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை நீக்கினாலும், விசிக ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க.வை பரிசீலிக்கவில்லை.
தொடர்ந்து, விசிக கொடியேற்றும் பிரச்சனை குறித்தும் முதல்வரிடம் பேசியுள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது எனவும் நம்புகிறோம். சொல்லப் போனால், திமுக ஆட்சிக் காலத்தில் கூட கொடியேற்றுவதில் சிறிய சிக்கல்கள் இருந்ததுண்டு, ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. தொடர்ந்து, ஒரு காலத்தில் விசிக - அதிமுக கூட்டணியில் இருந்தது. பின்னர், திருமாவளவன் ஒரு சிறிய முரண் காரணத்தால் வெளியே வந்தார். ஆனால், அதிமுகவிற்கும் எங்களுக்குமான உறவு சுமுகமாகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன், ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் தன் கால் மயிருக்கு சமானம் எனச் சொன்னவர். மாறாக, திருமாவளவன் வெளியேறுகையில் "அன்புத் தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழட்டும். ஆனால், தம்பிக்கு அரசியலில் அவசரம் கூடாது" என அறிவுறுத்தினார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்தும் உள்ளார். எனவே, சமீபமாக சில வருடங்கள் அதிமுக, சங்கிக் கூட்டத்துடன் சுற்றுவது தான் வருத்தமளித்தது. ஒருவேளை, வருகிற தேர்தலில் சில எம்.பி. சீட்டுகள் வென்று பாஜகவில் இணைவார்களா என்று உறுதியாக கூற முடியவில்லை. தற்போதைக்கு அவர்களை விரட்டிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த கூட்டணி விவகாரத்திற்கு தலைமை தான் முடிவெடுக்கும் என்ற அண்ணாமலை அதன் பிறகு எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல், எந்த ஒரு கட்சி தனது தொண்டனின் கனவுகளை உள்வாங்கி செயல்படுகிறதோ அதன் தலைவர் மாபெரும் தலைவனாக வருவான். தொடர்ந்து, தமிழ்நாட்டில் தி.மு.க.வை விட பெரிய கட்சி என்று பார்த்தால் அது அ.தி.மு.க. தான். தற்போது நடந்து வரும் போஸ்டர் போரில், புலிகேசி என எடப்பாடியை விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்கள்(அண்ணாமலை) தான் ரசத்திற்கு பயன்படுத்தும் கொட்டை எடுத்த புளி என்பேன். அதிமுகவை பொறுத்தவரை தொண்டனின் முடிவும் கட்சியின் முடிவும் ஒரு சேரத்தான் இருக்கும். ஆனால், பாஜகவில் தலைமை தான் தீர்மானிக்கும். அதேசமயம், இந்த கூட்டணி முறிவிற்கு மோடி அவர்கள் வரை கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு அ.தி.மு.க. உடைந்து சிதறியதற்கு காரணமே பாஜக தான். எச். ராஜா, அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டையை தூக்கிச் சுமந்தோம் என்கிறார். நெல்லிக்கனி கூட நிறைய விசயங்களுக்கு உதவும். ஆனால், பாஜக என்பது கள்ளிப் பால் போன்றது. இனிமேல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என்ற கட்சிகள் நிலைக்கும். இதனால் பா.ஜ.க.வினர் டெல்லிக்கு சென்று மோடி அவர்களுக்கு பாதுகாப்பாக செல்லவும் வாய்ப்புள்ளது. ஏன், அண்ணாமலையை கூட இந்த கூட்டணி பிரிவு விவகாரத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் செய்யலாம். தற்போது நடந்த கூட்டணி பிரச்சனை பிறகு நடைப்பயணம் கூட நின்றுவிட்டது என சொல்கிறார்கள். அந்தளவு அவர்களின் கதை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...
தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தது அரசியல் நோக்கத்திற்கு அல்ல. இது தமிழ்நாட்டில் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கவே வி.சி.க முயன்று வருகிறது. மேலும், பாஜக, பா.ம.க கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் வி.சி.க இடம்பெறாது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் திருமாவளவன். எனவே, வாழ்த்து தெரிவிப்பதனால் வி.சி.க, - அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்கும் என தீர்மானிக்கக் கூடாது. இன்றைக்கு எதிர்க்கட்சி ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு தொடக்கம் முதல் குரல் கொடுத்தவர் திருமாவளவன் தான்.
அதனால் அறிஞர் அண்ணாவை விமர்சிப்பது எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதை பரப்பிய அண்ணாமலை பொய் சொன்னதில்லை என சொல்கிறார். ஆனால், அவர் இதற்கு முன் 20,000 புத்தகம் படித்தேன் எனவும் பாரதிராஜா கட்சி என மாற்றியெல்லாம் கூறியுள்ளார். எனவே, அண்ணாதுரை அவ்வாறு பேசியுள்ளதாக அண்ணாமலை முழுக்க முழுக்க திட்டமிட்டு வெறுப்பரசியலை பரப்புகிறார். இதற்கு காரணம் அதிமுகவிற்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்கவே இது போன்று பரப்புகிறார். இவர் சொல்வது போலெல்லாம் அண்ணாதுரை இல்லை. இந்தியாவிற்கே அண்ணாதுரை சிறந்து விளங்கியவர். அன்றைக்கே ஆரிய மாயை புத்தகம், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி என்றெல்லாம் குரல் கொடுத்தவர் அண்ணாதுரை. அண்ணாமலை அறிஞர் அண்ணாவுடன் சேர்த்து, பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவையும் சேர்த்து அவமானப்படுத்துகிறார். மேலும், அண்ணாமலை என்பவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் தான். அ.தி.மு.க.வின் இந்த முடிவை நான் உண்மையாக பாராட்டுகிறேன்.
அதிமுகவின் தலையில் உட்கார்ந்து அவர்களை காலி செய்வதுதான் பாஜகவின் செயல் என திருமாவளவன் பலமுறை கூறியுள்ளார். இப்படி தான் பாஜக பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இவர்கள் திமுக, அதிமுக கட்சிகளை சில மத்திய அரசு நிறுவனங்களை வைத்து மிரட்டுவதாகவும் பேசி வருகிறார்கள். இவர்களின் நோக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து நிற்கும் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரின் சமூக ஆதரவை பெறவே முயற்சிக்கிறார்கள். அதனால் தான் முத்துராமலிங்கம் கூறியது என பரப்புகிறார்.
பாஜகவினர் முக்குலத்தோர் வாக்குகளை பிரிக்கவே முயல்கிறார்கள். தொடர்ந்து, பாஜக நிர்ப்பந்தித்த எம்.பி. இடங்களை அதிமுக தர மறுக்கிறது. இதனால், கட்சியின் சுய லாபத்திற்காகத் திட்டமிட்டு அறிஞர் அண்ணாதுரையை கொச்சைப்படுத்துகிறார்கள். பாஜகவினர், ஒன்று அண்ணாவை அவமானப்படுத்துகிறார்கள் அல்ல வருமானவரிச் சோதனை என எச்சரிக்கிறார்கள். இது எத்துனை பெரிய அயோக்கியத்தனம்? ஜனநாயகத்தில் இருப்பவர்கள் இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். எனவே, அதிமுகவின் இந்த துணிச்சலுக்கு பாராட்ட விரும்புகிறேன்.
தி.மு.க. வருகிற மக்களவை தேர்தலில் நாற்பதிலும் வெற்றி பெறும். இதனை, நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் சொல்லவில்லை. அ.தி.மு.க.வுடன் பாஜக இருக்கும் வரை எங்களுக்குத் தான் நல்லது. ஒருவேளை அ.தி.மு.க. தனித்து நின்றால் தி.மு.க விற்கு சற்று சிரமம் தான். நீங்கள் சொல்வது போல பாமகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே சிலவித போக்குகள் இருக்கிறது. இதன் காரணத்தால் விசிக அவர்களுடன் கூட்டணி வைக்கும் என்பது உறுதியில்லை. விசிக எப்பொழுதும் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் யுத்தம் செய்பவர்கள். மேலும், எங்களுக்கு தேர்தல் என்பது பிரதானம் இல்லை. அடுத்த தலைமுறையின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். இதனையொட்டி அடுத்து மாநாடும் நடத்தவுள்ளோம். அதற்கு 'வெல்லும் ஜனாயகம்' எனவும் பெயரிட்டு ‘விடுதலைச் சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்’ எனவும் சேர்த்துள்ளோம். இவ்வளவு ஏன், திமுக வெற்றி பெற்றதற்கும் விசிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது என சில ஊடக அறிக்கைகளே சொல்லியது. அதனால், கூட்டணி குறித்து நான் பேச முடியாது. கட்சித் தலைமை சொல்வதைத் தான் நான் செயலபடுத்த முடியும். தேர்தல் நேரத்தில் தான் எது குறித்தும் தீர்மானிக்க முடியும்.
சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் மக்களவை தேர்தலாக இருந்தாலும் விசிக இதுவரை சிறப்பாகவே வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை விசிக பானை சின்னத்தில் நிற்கவே விரும்புகிறது. மேலும், ஆறு எம்.பி. இடங்கள் வரையும் கேட்கவுள்ளது. ஏனென்றால் நாங்கள் இதற்கு முன்பு சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியை வைத்துதான் சொல்கிறோம். ஏனென்றால் விசிகவிற்கு தமிழக அளவில் மிகப்பெரிய கட்டமைப்பை வைத்துள்ளோம். எனவே, எங்களுக்கு அ.தி.மு.க. கட்சியுடன் எந்த முரணும் இருந்தது இல்லை.
ஏன் ஜெயலலிதா கூட, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் மயிருக்கு சமானம் என்று பேசியுள்ளார். ஆனால், திருமாவளவன் அவர்கள் வெளியேறும் பொழுது ‘தம்பி திருமாவளவனுக்கு அரசியலில் அவசரம் கூடாது. அவர் எங்கு சென்றாலும் வெற்றிபெற கூடாது’ எனவும் கூறியுள்ளார். நான் வெளிப்படையாக சொல்கிறேன், திமுக ஆட்சிக் காலத்தில் எங்கள் கட்சிக் கொடியை ஏற்ற சிரமமாக உள்ளது. ஆனால், அதிமுக காலத்தில் அப்படி எந்த சிரமமும் இருந்ததில்லை. பிரச்சனையை உருவாக்க இதனை நான் கூறவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க. இன்றைக்கு பாஜகவை ‘வெளிய போடா...’ என்பது போல் அழைத்துள்ளது. ஒருவேளை நாளைக்கே பாஜக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை சோதனையை விடுத்து, பின் அதிமுக பாஜகவை ஆதரித்தால், இதனை வைத்துக்கொண்டு விமர்சிக்காமல் எந்த சூழ்நிலையிலும் கருத்துகளை விசிக பதிவிடும். விசிகவிற்கு கொடியேற்றுவது கூட சிக்கலாகத்தான் இருக்கிறது. இதனை முதல்வரிடமும் கொண்டு செல்லவேண்டும். சமீபத்தில் மதுரையில் கூட எங்கள் கொடியை இறக்கி பிரச்சனை செய்தார்கள் சிலர். எனவே, எங்களின் சூழல் இப்படியாக இருக்கிறது.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...