Skip to main content

முன்னாள் முதல்வரின் பயோ-பிக்கில் விஜய் சேதுபதி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Vijay Sethupathi to play the former CM Siddaramaiah Biopic

 

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் கூட பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகிறது என படக்குழு அறிவித்திருந்தது.   

 

இந்நிலையில் கன்னடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க அவரது நெருங்கியவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சித்தராமையா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

சித்தராமையா, கிராமத்தில் பிறந்து சட்ட படிப்பு முடித்தவர். கடந்த 1983-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர். பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக ஆட்சி புரிந்தார். கடந்த 40 ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியிலிருந்த ஒரே முதல்வர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

ஆபரேஷன் தாமரை?; பா.ஜ.க. மீது சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
BJP Siddaramaiah accused of BJP for operation lotus

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பா.ஜ.க சதி திட்டம் நடத்தி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பினர் அவ்வப்போது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதே வேளையில். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய முதல்வர் சித்தராமையா, “கடந்த ஒரு வருடமாக எனது தலைமையிலான அரசை கவிழ்க்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர். எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்க தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்ய  முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் என்றைக்குமே விட்டு செல்லமாட்டார்கள். ஒரு எம்.எல்.ஏ கூட எங்கள் கட்சியை விட்டு செல்லம்மாட்டார்கள். எனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்” என்று கூறினார்.