Skip to main content

நான் ஈ வில்லனுடன் விஜய் சேதுபதி...கசிந்த புகைப்படம் 

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
vijay sethupathi

 

 

 

விஜய் சேதுபதி நடிப்பில் '96' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவரின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வந்தா மொத்தமா வராங்க” குழப்பத்தில் சினிமா காதலர்கள்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

இந்தியாவின் சினிமா மார்கெட் மிகவும் பெரியதாகிவிட்ட நிலையில், வாரா வாரம் ஏதாவது படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிலும் இந்த வார ரிலீஸ் நம்மை தலைசுற்ற வைக்கிறது. ஆமாங்க, நேரடி தமிழ் படங்களாக இரு படங்கள் வெளியாகிறது. மேலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இரண்டு படங்கள் ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஜோக்கர் திரைப்படம் நேரடி ஆங்கில படமாகவே வெளியாகிறது.
 

asuran joker syeraa

 

 

அக்டோபர் 2ஆம் தேதியில் மூன்று படங்கள் வெளியாகிறது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் திரைப்படம் ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ட்ரைலரை பார்க்கும்போதே செம ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. இரண்டாவதாக சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, சுதீப், நயன் தாரா, தமன்னா என இந்திய சினிமாவின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படமும் நாளை ரிலீஸாகிறது. ட்ரைலரை பார்க்கும்போது தெலுங்கில் வெளியாகும் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என்று தோன்றவைக்கிறது. மூன்றாவது படம்தான் ஜோக்கர். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் டிசி காமிக்ஸிலிருந்து வெளியாகும் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியான ஜோக்கர் திரைப்படம் பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளதோடு சிறந்த படத்திற்காக கிடைக்கும் தங்க சிங்கம் விருதையும் பெற்றுள்ளது. இதனால் பலரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நான்காம் தேதி ரிலீஸாக இருக்கும் ஜோக்கர் படம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பே இந்தியாவில் வெளியாக இருப்பதால் இந்திய ரசிகர்கள் குஷியோ குஷி!

சரி இந்த இரண்டாம் தேதியை விட்டு வழக்கமான நம்ம வெள்ளிக்கிழமை தமிழ் படங்கள் ரிலீஸ் என்னவென்று பார்த்தால், அது அதுக்குமேல ஷாக் கொடுக்குது. தனுஷ் வேறமாதிரி புதுமையான ஒரு கதாபாத்திரத்தில், அதுவும் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதனால் அசுரன் முதல்பார்வை போஸ்டர் வெளியானபோதில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. எனவே இந்த படத்திற்கும் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வெக்கை என்னும் நாவலை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், தமிழ் சினிமாவில் இனி நாவலை மையமாக வைத்து பல படங்களை எடுக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே தேதியில் வெளியாகும் 100 பெர்சண்ட் காதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ், அசுரன் படத்தில் இசையமைத்திருக்கிறார்.

 

ad


அதே நேரம் அங்காமளி டைரீஸ் என்னும் மலையாள படத்தை எடுத்த லிஜோ ஜோஸ் பெலிஸ்ஸெரியின் ஜல்லிக்கட்டு படம் பல சினிமா காதலர்கள் மற்றும் மலையாள படம் காதலர்களின் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இந்த படம் மிகவும் குறைந்த தியேட்டர்களிலேயே வெளியானாலும் இத்தனை படங்களுக்கு நடுவில் வெளியாகிறது. ஆக மொத்தம் சினிமா காதலர்களின் மைண்ட் வாய்ஸ் “வந்தா மொத்தமா வாங்க, இல்லாட்டி ஒருத்தனும் வராதீங்க”

 

Next Story

‘இந்தியாவில் ஒரே ஒரு மெகா ஸ்டார்தான்’ - பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம்  ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 

sye raa

 

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. 
 

பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது அப்போது பேசிய சிரஞ்சீவி, “அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது” என்று கூறினார்.