scas

தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நேற்று (ஜனவரி 16) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது நடந்தபிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிறந்த நாள் கேக்கினை விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் வெட்டுவது போன்றபுகைப்படம் நேற்று வைரலானது. இதில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்தப் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பலரும் விஜய் சேதுபதியின் இந்த செயலை கண்டித்து வரும் நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"வணக்கம்,

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

Advertisment

நன்றி

விஜய் சேதுபதி" என கூறியுள்ளார்.