Advertisment

விஜய் சேதுபதி தொடர்பான வழக்கு; சமாதானமாகச் செல்ல நீதிமன்றம் அறிவுறுத்தல்

vijay sethupathi airport case

கடந்த 2021 ஆம் ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிதன்னை தாக்கியதாகக் கூறி மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘மைசூருக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைபெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்துப் பேசி வாழ்த்தியதாகவும் அதை விஜய் சேதுபதி ஏற்க மறுத்து சாதியைக் குறிப்பிட்டுத்தவறாகப் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன்னைவிஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தாக்கியதாகவும் அவர்கள் இருவரையும் குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு’ கேட்டுக்கொண்டார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதிக்குசம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உரிய ஆதாரம் இல்லாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது செல்லாது எனக் கூறி விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சமரசமாகப் பேசி தீர்வு காணலாம். இருவரும் சமாதானமாகச் செல்வதாக இருந்தால் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என நீதிபதி கூறினார். மேலும், இந்த சமாதானபேச்சு குறித்து வருகிற மார்ச் 2 ஆம் தேதி இரு தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.

actor vijay sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe