Skip to main content

"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில..." - விஜய் சேதுபதி    

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

தமிழ்நாடு முழுவதும் (வேலூர் நீங்கலாக) இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

 

vijay sethupathi

 

vijay sethupathi with kids

 

vijay sethupathi selfie



நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பகுதியில் கார்ப்பரேஷன் காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்து முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் முதல்ல ஓட்டு போடுற அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது ப்ரௌட் மொமண்ட். ஏன்னா, பதினெட்டு வயசுல நம்ம வீட்டுல கூட ஒரு முடிவெடுக்க நம்மை கேப்பாங்களானு தெரியாது. ஆனா, நம்ம நாட்டை யார் ஆளுறதுன்னு உங்ககிட்ட கேக்குறாங்க. நானும் ஓட்டு போட்டுட்டேன். எல்லோரையும் போல நானும் காத்துகிட்ருக்கேன், நல்லது நடக்கும்னு" என்று கூறினார்.

 

kanchana 3 ragava lawrence



பின்னர் செய்தியாளர்கள், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. உங்கள் கருத்து என்ன?" என கேட்க, "நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். வாட்ஸ்-அப்ல மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பல சந்தேகங்கள் எல்லாம் வருது. ஆனா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. ஆனா, ஒன்னு மக்களுக்கு அரசியல் குறித்து அறிவும் விழிப்புணர்வும் அதிகரித்துக்கொண்டே இருக்கு. இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று பதிலளித்தார்.

தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் பேச அருகில் சென்றனர். அவர்களிடம் அன்பாகப் பேசிய அவர் அங்கிருந்த குழந்தைகளிடம் கைகொடுத்துப் பேசினார். செல்பி எடுக்க விரும்பியவர்களிடம் "இங்கயுமா" என்று சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துக்கொடுத்துச் சென்றார்.             

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.