Skip to main content

ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் நான்கு படங்கள்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

vijaysethupathi

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். கதாநாயகன் பாத்திரம் மட்டுமல்லாது வில்லன், துணை கதாபாத்திரம் என நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள நான்கு படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன.

 

மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படமும் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. ஒரே மாதத்தில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்காத 'ஜவான்' - டிரைலர் வெளியீடு!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் இந்தாண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், அண்மையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

Next Story

“சொந்த வசனத்தை சேர்த்துக்கொள்ள இந்த இயக்குநர் அனுமதிப்பார்” - அனுபவம் பகிரும் பக்ஸ்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Bagavathi Perumal  interview

 

பல படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பினால் நம்மை ஈர்த்த நடிகர் பக்ஸ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக நாங்கள் பல மாதங்கள் ரிகர்சல் செய்தோம். அதனால் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் பலமுறை நடித்துப் பார்த்தோம். படத்தில் எப்போதும் நாங்கள் விஜய் சேதுபதியோடு இருப்பது போன்று எங்களது கேரக்டர்கள் அமைந்தன. அந்தப் படத்தின் கதை பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றது. ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். என்னுடைய நடிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெகுவாகப் பாராட்டினார். 96 படமும் சிறந்த ஒரு அனுபவம். இயக்குநர் பிரேம் நல்ல நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்.

 

நானும் விஜய் சேதுபதியும் ரொம்ப க்ளோஸ் நண்பர்கள் என்று பலர் நினைக்கின்றனர். நாங்கள் நல்ல நண்பர்கள் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஃபோனில் பேசுவதே பெரிய விஷயம். 96 படத்தில் என்னுடைய நடிப்பை அவர் மிகவும் பாராட்டினார். அவ்வப்போது பேசினாலும் சிறந்த ஒரு நண்பர் அவர். தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வாய்ப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு கிடைத்தது. அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒரே படத்தில் எனக்கு நிறைவேறியது.

 

ஃபகத் பாசில் சிறந்த ஒரு நடிகர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரோடு நடித்தது அருமையான அனுபவம். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னுடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். சில சொந்த வசனங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பார். படத்தை மெருகேற்றுவதே அவருடைய நோக்கம். அதனால் அந்த படப்பிடிப்பு மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.