Skip to main content

விஜய் - அட்லீ படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு !

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
vijay atlee

 

 

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கிறது. நயன்தாரா இரண்டாவது முறையாக விஜய்யுடன்  ஜோடி சேர்ந்துள்ளார். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இப்படம் விஜயகாந்த்தின் 'சந்தன காற்று' படத்தை தழுவி உருவாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் அட்லீ?

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

director atlee joining vijay in next movie

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்நிலையில் 'தளபதி 68' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால், இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

''நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா'' - அட்லீ நெகிழ்ச்சி 

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் வெளியான தெறி படம் நேற்றோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அட்லீ - விஜய் கூட்டணியில் முதல் படமாக உருவான இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயரித்த இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனது குறித்து இயக்குனர் அட்லீ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

hfh

 

"தெறி எனக்குப் பிடித்தமான படம். என் இதயத்துக்கு நெருக்கமான படம். எல்லாவற்றுக்கும் விஜய் அண்ணாதான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா. எனக்கு இந்தச் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா. என் 'தெறி' குழுவுக்கு என் அன்புகள். தயாரிப்பாளர் தாணுவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.