Skip to main content

கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் விஜய் மில்டன்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

hfdndfnd

 

கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் தற்போது ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘பைராகி’ படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்த ஆக்சன் கமர்ஷியல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்தும் இயக்குநர் விஜய் மில்டன் குறித்தும் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் கூறியபோது...

 

"நான் தமிழ் சினிமாவின் தீவீர ரசிகன். தொடர்ந்து தமிழ்த் திரையுலகைக் கவனித்துவருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே உடனடியாக பார்த்துவிடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் நான். அவரது படங்களை முதல் நாளிலேயே பார்த்துவிடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச் சிறப்பான படங்களைச் செய்துவருகிறார். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்குத் தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறியபோது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சனைக் கலந்து அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. 

 

எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து, கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாகச் செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னைக் கொண்டாடிவருகிறார்கள். அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப் படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ் கெட்டப் - விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

vijay miton new movie with shaam

 

தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், பரத் நடிப்பில் வெளியான 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஷாம் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம் லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.

 

 

Next Story

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

The film crew has released the new update of Vijay Antony movie

 

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.