கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

cdc

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசியதைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். அதில்.... ''பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. வெளியில் சுற்ற முடியாத போது நாங்கள் என்ன பண்ணுவோம் ? மாஸ்டர் டீம் சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் இருக்கிறோம். நீங்கள் ?'' என சமூக விலகல் விழிப்புணர்வு குறித்துப் பதிவிட்டுள்ளார்.