Skip to main content

“அந்த மொழியில் பாடமாட்டேன் என்று சொல்லவே இல்லை”- பாடகர் விஜய் யேசுதாஸ்

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

vijay yesudas

 

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகனாவார். மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. மேலும் இவர் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதன்பின் படைவீரன் என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
 

 

இவர் சிலநாட்களுக்கு முன்பு ஒரு மலையாள பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில், இனி நான்  மலையாளத்தில் பாட மாட்டேன் என்று அவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது. மலையாளதில் முதன்முதலாக அறிமுகமான இவர் மலையாளத்தில் படமாட்டேன் என கூறியதாக வந்த தகவல் மலையாள ரசிகர்களை கோபமடைய செய்தது. அதை தொடர்ந்து கேரள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டியும் மோசமாக விமர்சித்தும் வந்தனர்.

 

இந்த நிலையில் விஜய் யேசுதாஸ் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்ததுள்ளார். நான் இனி மலையாளத்தில் பாடமாட்டேன்  என்று கூறவில்லை. நான் கூறியதை திரித்து தலைப்பாக வைத்து விட்டது என்றார். மேலும் அதில், மலையாளத்தில் இனி பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவேன் என்று  மட்டுமே கூறினேன் என தெரிவித்துள்ளார் .

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Jewelery stolen from Vijay Yesudas house; A sudden turn in the police investigation

 

பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனது தொடர்பான சம்பவத்தில் போலீசார் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வசித்து வரும் சென்னை அபிராமபுரம் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் மார்ச் 30 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த வடநாடு மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

 

தொடர்ந்து அவர்கள் இருவரையும் சென்னை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக 11 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாருமே நகைகளைத் திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் ரகசிய பதிவெண் கொண்ட லாக்கர். எனவே குடும்ப உறுப்பினர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

விஜய் யேசுதாஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரே நபர்?

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

vijay yesudas home jewellery theft case update

 

பாடகர் விஜய் யேசுதாஸ் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்ஷா தங்கள் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக சில தினங்களுக்கு முன்பு அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டில் பணிபுரியும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அவர் வீட்டில் பணிபுரிந்த 3 நபர்களிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் நகை திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஓட்டுநர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது.  

 

ஓட்டுநர் வெங்கடேசன், முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் பணிபுரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.