Published on 19/07/2018 | Edited on 19/07/2018

நடிகர் விஜய்யின் வெறிபிடித்த ரசிகரான கிருஷ்ணா தாஸ் புரமேறி வருடாவருடம் விஜய்யின் பிறந்தநாளன்று கோவில்களில் வேண்டுதல் நிறைவேற்றுவது வழக்கம். கேரள மாவட்டம் குருவாயூரை சேர்ந்த இவர் சென்ற ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஜய் பிறந்தநாளுக்காக அங்கப்பிரதட்சணம் செய்தார். இந்நிலையில் இந்த வருடம் விஜய்யின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணா தாஸ் கேரளாவின் குட்டியூர் பரமசிவன் கோவிலில் உள்ள ஆற்றின் நீரில் அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றிய வீடியோ நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.