Skip to main content

அஜித்திற்கு எழுதிய வசனத்தை கேட்டு சிலிர்த்துப்போன சிவா! - விஜய்க்கு நெருக்கமான இயக்குனர் பரதன்  

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

பரதன்... தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்களுக்கு புதிய பாதையை அமைத்த 'தில்' படத்தின் வசனகர்த்தா, ஸ்க்ரிப்டிலும் இயக்குனர் தரணியுடன் இணைந்து பணியாற்றியவர். இவர்கள் உருவாக்கிய 'தில்' படத்திற்கு பிறகு, அதே டெம்ப்லேட்டில் ஒரு ஐம்பது படங்களாவது வந்திருக்கும். தொடர்ந்து 'தூள்', 'கில்லி' என பெரிய வெற்றிகளை பெற்ற கூட்டணியில் இருந்து பிறகு தனியாக 'அழகிய தமிழ்மகன்', 'அதிதி', பைரவா' உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். விஜய்க்கு பல படங்களில் பன்ச் எழுதிய இவரது பேனா அஜித்திற்கும் அசத்தலாகவே எழுதியது. 'வீரம்' படத்தில் இவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் அஜித் ரசிகர்களுக்கு பாடம், மனப்பாடம். அவருடன் நாம் நடத்திய நீண்ட உரையாடலின் ஒரு பகுதியில் 'வீரம்' படங்களின் வசனங்கள் உருவான விதம் குறித்து கூறினார்...

 

director barathan



"அஜித் சார் நடிக்கும் வீரம் படத்தில் பணிபுரிய நண்பர் சிவா அழைத்தார். என் பார்வையில் படத்தின் கதைக்கு வழு சேர்க்கும் விதமாக எப்படியெல்லாம் வசனங்கள் வைக்கலாம் என்று யோசித்து, அஜித் சாருக்கு இருக்கும் மாஸ், அதற்கு முன்பு அஜித் சார் நடித்த படங்கள், அதில் அவருக்கு வசனங்கள் எழுதப்பட்ட விதம், படத்தின் டைட்டில் 'வீரம்' என எல்லாவற்றையும் யோசித்து மனதில் கொண்டு பணியாற்றினேன். ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை நானும் சிவாவும் கதை, காட்சிகளெல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு மாலையில் ஒரு சீனுக்கு நான் எழுதத் தொடங்கினேன். அஜித் சார் அண்ணன், நாலு தம்பிகள், அவர்களோடு தன்னிடம் வேலை செய்யும் அப்புக்குட்டியையும் தம்பியா கருதுறார். அந்த அப்புக்குட்டியின் கல்யாணத்துக்கு வரும் அஜித், அங்கு செய்யும் ஒரு செயலைப் பார்த்து தமன்னாவிற்கு அஜித்தின் மேல் காதல் வரவேண்டும். இதுதான் சீன். இதை எழுதும்படி என்னிடம் சொல்லிவிட்டு சிவா சென்றுவிட்டார்.

நான் இதை ஒரு நல்ல சீனா கொண்டுவரணுமென்று யோசித்து எழுதத் தொடங்கினேன். வேலை செய்ற ஒருத்தருக்கு பணமோ நகையோ கொடுக்குறது வழக்கமான ஒன்னு. ஒரு டாகுமெண்ட் கொடுக்குற மாதிரி வச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சு, அப்புக்குட்டி கல்யாணத்துக்கு வரும் அஜித், புதுமணத்தம்பதி அவர் காலில் விழுந்து ஆசி வாங்கும்போது அவருக்கு கல்யாணப்பரிசாக ஒரு டாக்குமெண்டை கையில் கொடுப்பதுபோல வச்சேன். "இது என்னன்னே?"னு அப்புக்குட்டி கேட்பார். "இதுவரைக்கும் நீ தொழிலாளி, இனிமேல் நீ முதலாளிடா. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல உன் பேருக்கு ஒரு கடை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கேன்" என்று சொல்வார் அஜித். "டே தம்பி... டே தம்பினு நீ கூப்பிடும்போதெல்லாம் உதட்டிலிருந்து கூப்பிடுறன்னு நெனச்சேன். இப்போதான் தெரியுது நீ மனசுல இருந்து கூப்பிட்டு இருக்க" என்று சொல்லி நெகிழ்வார் அப்புக்குட்டி. அவர் போனதும் அஜித்தின் தம்பி, "என்ன அண்ணே" என்று கேட்க, அஜித் சொல்வார், "நமக்கு கீழ இருக்கவங்கள நம்ம வாழவச்சா மேல இருக்கவன் நம்ம வாழ வைப்பான்"னு. தமன்னாவும் தனக்குக் கீழ வேலை பார்க்கும் ஒருத்தனுக்கு முழு வாழ்வாதாரத்தையும் அமைச்சுக் கொடுக்குற அந்த மனசை பார்த்து லவ் பண்ணுவாங்க.

  veeram scene



இப்படி அந்த சீனை எழுதி சிவா சார்கிட்ட சொன்னபோது, அவர் என்னிடம் தன் கையை காட்டினார். 'சார் சிலிர்த்துருச்சு சார்'னு சொன்னார். தியேட்டரிலும் அந்த வசனத்துக்கு அதே ரெஸ்பான்ஸ் இருந்தது. அஜித் சார் அதை பேசும்போது இன்னும் பொருத்தமாக இருந்தது, ரசிக்கப்பட்டது. அது உண்மைதான், இன்னைக்கு பெரிய, வெற்றிகரமான தொழிலதிபர்களா இருக்கக்கூடிய யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் தங்கள் தொழிலாளர்களை நல்லா வச்சிருப்பாங்க. அப்போதான் அவங்க உயர முடியும். 

சிவா சாரே ஒரு நல்ல வசனகர்த்தாதான். வீரம் படத்தில் அவர் எழுதிய பல வசனங்கள் இருக்கு. இந்தப் படம் எழுதிவிட்டு நான் 'அதிதி' என்ற படத்தை இயக்கச் சென்றுவிட்டதால் அஜித் சாரை அதிகம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிவா சார்கிட்டயும் சொல்லியிருந்தேன் என்னால ஷூட்டிங் வர முடியாதுன்னு. சென்னையில் வீரம் ஷூட்டிங் நடந்தபோது ஒரே ஒரு முறை போயிருந்தேன். அப்போ, சிவா சார் அறிமுகம் செஞ்சு அஞ்சு நிமிஷம் மட்டும் பேசினோம். 'படம் நல்லா வந்துக்கிட்டு இருக்கு'னு அஜித் சார் சொன்னார். மற்றபடி அவருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்படவில்லை".                     

           

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.