இதனைத் தொடர்ந்து பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில், ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. பின்பு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மளிகை பொருட்களும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தின. தொடர்ந்து தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்களும் நிதியுதவியும் வழங்கினர். நெல்லையில் நடந்த இந்த நிகழ்வில், விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.