Skip to main content

சிங்கிள்ஸுக்காக ஒரு சிங்கிள்! வருகிறது 'ஸ்டைலச்சியே தமிழச்சியே...'

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

'முரட்டு சிங்கிள்', 'ஆல்வேஸ் சிங்கிள்', 'சிங்கள் ஃபாரெவர்'... என 'சிங்கிள்'தன்மையை கொண்டாடும் காலம் இது. வெளியில் கொண்டாட்டமாக இருந்தாலும் மனதிற்குள் 'ல்தகா சைஆ', அதுதான் 'காதல் ஆசை' இல்லாமலா போகும்? மனதிற்குள் காதல் ஆசை, வெளியில் சிங்கிள் கெத்து என்று சுற்றும் இளைஞர்கள் கொண்டாடும் வண்ணம் ஒரு பாட்டுடன் வந்திருக்கிறது இசையமைப்பாளர் அருள்தேவ் அண்ட் டீம். 

 

daHDV

 

"திரைப்பட பாடல்கள் அல்லாத தனியிசை ஆல்பம் பாடல்கள் மீது மதுரையை சேர்ந்த தொண்ணூறுகளில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு கிட்டத்தட்ட கிறுக்கு எனப்படும் அளவுக்கு மோகம் உண்டு. ஆங்கில பாடகர்களின் தனியிசை ஆல்பம் இந்தியில் அலிஷா ஷெனாய், லக்கி அலி, கொலோனியல் கசின்ஸ் என்று இந்த பட்டியல் நீளும். அப்போதே இந்த ஆல்பம் அடங்கிய கேசட் விலை அதிகம். அறுபது ரூபாயில் இருந்து நூறு ரூபாய் வரை வரும். சிடிக்கள் அப்போது பணக்கார வீடுகளில் மட்டுமே இருக்கும். தமிழில் அப்படி தரமான தனியிசை பாடல்கள் வரவேண்டும் அதை ஒருநாள் நாம் படமாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு நெடுநாட்களாக உண்டு" என்று விறுவிறுவென ஒரு சின்ன ஹிஸ்ட்ரியே சொல்கிறார் பாடலுக்கான கான்செப்ட்டை உருவாக்கிய விஜய் மகேந்திரன்.

 

 

13.11.19 அன்று லிரிக்கல் வீடியோவாக வெளிவர இருக்கும் இந்தப் பாடலுக்கான வீடியோவை இயக்கும் இவர் ஒரு எழுத்தாளர். இவருடைய சிறுகதை தொகுப்பான 'நகரத்திற்கு வெளியே' இலக்கியத்தளத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து இவர் எழுதிய 'ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம்' என்ற புத்தகம் பல பதிப்புகளை கண்டுவிட்டது. 

 

ZC

 

இசையமைத்துப் பாடியுள்ள அருள்தேவ், 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பீ' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர், தென்னிந்தியா முழுவதும் பறந்து பறந்து வேலை செய்பவர். மரகதமணி, வித்யாசாகர், மிக்கி ஜே மேயர் என பல இசையமைப்பாளர்களின் ஃபேவரிட் கீ-போர்ட் பிளேயர், ப்ரோக்ராமர் இவர். பாகுபலி-2, நடிகையர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'பூவரசம் பீப்பீ' படத்தில் இவரது பாடல்கள் பால்ய காலத்தின் வெப்பத்தை நமக்கு சுகமாகத் தந்தவை. இப்போது 2K கிட்ஸின் டேஸ்டுக்கு செம்ம மாடர்னாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். 

 

vdvd

 

’DPயா உன்ன வச்சு, பீ...பீ...பீ... மேளமடிச்சு, statusa மாத்தணுமே...' என சிங்கிள்ஸின் வாட்டத்தையும் 'ஆயிரம் ஆப்ஷன் எனக்கிருக்கு எனக்கெதுக்கிந்த அரை கிறுக்கு, காதல் எல்லாம் outdated இப்ப நாங்கதான்டா updated' என நியூ வேவ் கேர்ள்ஸின் மன ஓட்டத்தையும் ஜாலியாக காலி செய்திருக்கிறார் பாடலாசிரியர் வசந்த். 'டிவோ மூவீஸ்' நிறுவனத்தின் இந்தப் பாடலை 13-11-2019 அன்று சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார் விஜய் ஆண்டனி. 'இன்டிபெண்டென்ட் மியூசிக்' எனப்படும் தனியிசை பாடல்களுக்கான இடம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. 'கிளப்புல மப்புல', 'முட்டு முட்டு', 'உரசாத' போன்ற பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி பெரிய வெற்றியை பெற்றன. அந்த வரிசையில் 'ஸ்டைலச்சியே...' இணைய வாழ்த்துகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் ஆண்டனிக்கு காதல் கதை கைகொடுத்ததா? - ரோமியோ விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
vijay antony mirnalini ravi romeo movie review

அதிகமாக கிரைம் கில்லர் மற்றும் சென்டிமென்ட் படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற விஜய் ஆண்டனி இந்த முறை காதல் திரைப்படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக வெளியாகி இருக்கும் ரோமியோ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா? 

தன் குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைத்து நல்ல நிலைமைக்கு வர மலேசியாவுக்கு சென்று வேலை செய்துவிட்டு நன்றாக சம்பாதித்து அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. இதனாலேயே அவருக்கு வயது முதிர்ந்து விடுகிறது. இருந்தும் தன்னுடைய பிரைம் டைமில் செய்ய முடியாத காதலை இனிவரும் நாட்களில் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, ஒரு மரண நிகழ்வில் நாயகி மிருணாளினியை பார்க்கிறார். விஜய் ஆண்டனிக்கு கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே தன் குடும்பத்துக்கு தெரியாமல் சென்னையில் ஐடியில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற முனைப்பில் கிடைக்கின்ற சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருணாளினி வீட்டில் மாட்டிக்கொள்கிறார்.

vijay antony mirnalini ravi romeo movie review

இதைத்தொடர்ந்து அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பொழுது மிருணாளினி, விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு தான் சென்னையிலேயே வசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு விஜய் ஆண்டனியும் சம்மதிக்க திருமணம் ஜோராக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு சென்னை வரும் விஜய் ஆண்டனிக்கு மிருணாளினியின் சுயரூபம் வெளிப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மிருணாளினியின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு தயாரிப்பாளராக மாறுகிறார். இதையடுத்து மிருணாளினி பெரிய கதாநாயகியாக மாறினாரா, இல்லையா? விஜய் ஆண்டனியும் அவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

பாலிவுடில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப்னே பனாதி ஜோடி’ படத்தை உல்டா செய்து அதை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி சுவாரஸ்யமான ஒரு காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். என்னதான் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு திரைக்கதை வைத்து உருவாகிய படமாக ரோமியோ இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாதவாறு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்கும்படி இருந்தாலும், அதே போல் படத்தின் முடிவும் நாம் ஏற்கனவே யூகித்தபடி இருந்தாலும் படம் பார்ப்பதற்கு எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் செல்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

திருமணமே பிடிக்காத கதாநாயகிக்கு திருமணத்திற்குப் பிறகு நாயகியை நாயகன் ஒன்சைடாக காதல் செய்து எப்படி கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை வைத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றாற் போல் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தியில் வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தில் எந்த அளவு கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்ததோ, அதேபோல இந்த படத்திலும் வேறு ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு அதே மாதிரியான திரைக்கதை மூலம் அதே ஆழமான அழுத்தமான கதாபாத்திரத் தொடர்பை சரியாக கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்கள். 

vijay antony mirnalini ravi romeo movie review

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறார். எந்த வகையான கதையாக இருந்தாலும் தனது ட்ரேட் மார்க் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். அந்தந்த கதைக்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை சரியாக கொடுத்து படத்திற்கும் பக்கபலமாக அமைகிறார். அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நாயகி மிருணாளினி நாம் இதுவரை பார்த்த படங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருத்தமாக இருக்கும் படியான தோற்றமும் நடிப்பும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி சுவாரசியமாக அமைந்து படத்துக்கு பிளசாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் யோகி பாபு வந்து செல்கிறார் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரை காட்டிலும் விடிவி கணேஷ் பல இடங்களில் நன்றாக கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி படத்தில் வரும் மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பரத் தனசேகர் மற்றும் ரவி ராய்ஸ்டர் இசையில் பாடல்கள் வித்தியாசமான முயற்சியில் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் படத்தின் சென்னை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தி சினிமாவுக்கும் இது பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிது. இந்தி சினிமாவை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கும், பார்த்த தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. 


ரோமியோ - மினிமம் கியாரண்டி!

Next Story

“திருமாவளவனுக்கு குரல் கொடுக்கிறேன்” - விஜய் ஆண்டனி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
vijay antony about politics and said he support thirumavalavan, vijay, stalin

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனால், படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் ஆண்டனியிடம், விஜய் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர முடிவெடுத்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “சினிமாவில் சின்ன வயதிலிருந்தே அவர் நடிக்கிறார். 17 வயதிலிருந்தே ஒரே வேலையை பார்க்கிறார். அதில் உச்சமும் தொட்டுவிட்டார். அதனால் அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க போகிறார். அது வரவேற்கத்தக்கது தான்” என பதிலளித்தார். 

vijay antony about politics and said he support thirumavalavan, vijay, stalin

தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு எல்லாரும் வர வேண்டும். இப்போது எனக்கு நடிப்பிலே நேரம் போய்கொண்டிருக்கு. எதிர்காலத்தில் ஒரு வேளை, மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தால் வாய்ப்பிருக்கிறது. நான் எல்லாருக்குமே குரல் கொடுக்கிறேன். திருமாவளவன், விஜய், ஸ்டாலின் என அனைவருக்கும் குரல் கொடுக்கிறேன்.  

ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ரொம்ப வறுமை, அடுத்த வேலைக்கு சாப்பாடு இல்லை, பசங்களுக்கு பள்ளிக்கட்டணம் கூட கட்ட பணமில்லை என்ற சூழலில், காசு வாங்கிக்கலாம். நம்ம பணத்தை திருப்பி தராங்க. ஆனால் ஓட்டு போடும் போது மட்டும் காசு கொடுத்தவங்களுக்கு போடனும் என்று நினைக்க கூடாது. வாங்குவதில் ஒன்னும் தப்பில்லை. வாங்கிவிட்டு சரியான மனிதர்களுக்கு ஓட்டு போடலாம்” என்றார்.