Vijay Antony health condition about director Suseenthiran

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விஜய் ஆண்டனியின் ஹீரோ பயணத்தில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது பிச்சைக்காரன். இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று ப்ளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது.

Advertisment

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2' படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இயக்கியும்நடித்தும்இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துவிஜய் ஆண்டனி சென்னைக்குஅழைத்து வரப்பட்டு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில்விபத்தில் காயம் அடைந்தவிஜய் ஆண்டனி சார்2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையிலஅவரு வீட்டுக்குவந்துட்டாரு.இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லிருக்காங்க.கூடிய சீக்கிரம் ரசிகர்கள்கிட்டவீடியோ மூலமா பேசுவாரு.ரசிகர்கள்யாரும் பயப்பட வேண்டாம்.அவரை பற்றியதவறான வதந்திகளைநம்பவேண்டாம்னு கேட்டுக்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுசீந்திரன்விஜய் ஆண்டனியை வைத்து ‘வள்ளி மயில்’ படத்தை உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.