Skip to main content

தவிர்த்த விஜய், அஜித்... சந்தித்த விஜய் ஆண்டனி!   

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

maniyarfamily

கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் அவரை சந்தித்தபொழுது எடுத்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என கலைஞரின் உடல்நலத்தை விசாரிக்க தினமும் பலர் காவேரி மருத்துவமனை வந்து செல்கின்றனர். அதில் அரசியல் தலைவர்களே அதிகமாக இருந்த நிலையில், நேற்று முக்கிய நடிகர்களும் வந்து நலம் விசாரித்தனர். நடிகர்கள் அஜித், விஜய், கவுண்டமணி, விவேக், விஜய் ஆண்டனி ஆகியோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

koundamani


 

vijay antony


 

ajith


 

vijay



பொதுவாக இதுவரை வந்தவர்களில் பெரும்பாலானோர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் விசாரித்தறிந்த தகவல்களை பகிர்ந்தனர். நடிகர் விஜய் ஆண்டனி, "இத்தனை வருஷமா ஒரு கட்சியை நிலை நிறுத்தி, நாட்டை வழிநடத்தி, தமிழுக்கு சேவை செய்த அவரின் அறிவு மிகப்பெரியது. அந்த வரலாறு நம்மையெல்லாம் விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. நான் விசாரித்தவரை கலைஞர் அய்யா நன்றாக உடல்நலம் பெற்று வருகிறார். கூடிய சீக்கிரம் வீடு திரும்புவார். நல்லது நடக்கும்" என்று கூறினார்.

 

 


நடிகர் விவேக், "சினிமா, அரசியல் இரண்டிலும் பாடலாசிரியர், இலக்கியவாதி, அரசியல் ராஜதந்திரி, உழைப்பாளர் என எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் கலைஞர் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். அவர் கூடிய சீக்கிரம் இல்லம் திரும்பி தமிழ்ப்பணியைத் தொடர்வார் என நம்புகிறேன்" என்று கூறினார்.

 

 

rajini



 

sivakarthikeyan



முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவருமே செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றனர். வழக்கமான காரில் அல்லாமல் சிறிய காரில் வந்த விஜய், எட்டு நிமிடங்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தார். ஸ்டாலினை சந்தித்த பின்னர் வாயிலில் அல்லாமல் வேறு வழியில் வெளியேறினார். அஜித்தும் குறைந்த நேரமே இருந்தார். அவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நடிகர் கவுண்டமணி வந்து பொழுது, திராவிடர் கழகம் தலைவர் வீரமணியும் அங்கிருந்தார். இருவரும் இணைந்தே ஸ்டாலினை சந்தித்தனர்.

 

 


இவர்களுக்கு முன்பே டி.ஆர்., சிவக்குமார், சூரியா, அதன்பின் நடிகர் ரஜினிகாந்த், நாசர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர். இன்று (2 ஆகஸ்ட்) நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவமனைக்கு வந்தார்.  



          

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.