"ஆரோக்கியம் எப்போதும் மருந்திலிருந்து வருவதில்லை" - விக்னேஷ் சிவன்

vignesh shivan post goes viral

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.மேலும்தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள்.பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்ய உரிமையை வாங்கியது. இதனை விரைவில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையேஇவர்களின் குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மேலும் அந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சட்ட விதிகளை மீறி செயல்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "ஆரோக்கியம் எப்போதும் மருந்திலிருந்து வருவதில்லை. அது பெரும்பாலான நேரங்களில் மன அமைதி, ஆன்மாவின் அமைதி ஆகியவற்றில் இருந்துதான் வருகிறது. மேலும் அது சிரிப்பு மற்றும் அன்பில் இருந்தும் வருகிறது" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ACTRESS NAYANTHARA vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe