Skip to main content

படங்களின் புரமோஷனுக்கு நயன்தாரா ஏன் வருவதில்லை? - விக்னேஷ் சிவன் விளக்கம்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

vignesh shivan about nayanthara promotion issue

 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனம் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதற்கான வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் விக்னேஷ் சிவனோடு நயன்தாராவும் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் நயன்தாரா தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்துவந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் தயாரித்து நடித்த கனெக்ட் படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 

 

இந்த நிலையில் நிகழ்ச்சி மேடையில் பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சி பங்கேற்பது தொடர்பாக பேசினார். அவர் பேசுகையில், "நயன்தாராவுக்கு ஒரு விஷயம் சரி என தோன்றினால் மட்டுமே அதை ப்ரோமோஷன் செய்வார். நிறைய நேரங்களில் அவர் நடித்த படங்களையே அவர் ப்ரொமோட் செய்யாமல் இருந்திருக்கிறார். அது, ஒரு படம் அதுவாகவே ப்ரொமோட் செய்துகொள்ளும் என்ற அர்த்தத்தில்  இல்லை. ஒரு நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் அதுவே தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும். அது தான் அவருடைய உள் நம்பிக்கை. 

 

ஆரம்ப கட்டத்தில் அவர் ஒரு பிராண்ட் அம்பாசிடராக வருவார். அதைப் பற்றி பேசுவார். சில புகைப்படங்களை எடுப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பொருளின் டிசைன், பாட்டில், எழுத்தின் வடிவம், பேக்கேஜ் என முழுவதையும் கவனித்துக் கொண்டார். அதற்காக நிறைய மெனெக்கடல்களை மேற்கொண்டார். அதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.