Skip to main content

பாலிவுட் அரசியலை சுட்டிகாட்டிய நடிகர் விஜுத்! 

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
vidyut

 


கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு இந்திய நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்த பின்னரே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்நிலையில், ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

 

 

இதனை தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை அந்தந்தத படத்தின் நடிகர்களின் வீடியோ பதிவுடன் வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.

 

 

சுஷாந்தின் இறுதி படமான தில் பேசாராவை சேர்த்து மொத்தம் ஏழு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஜய் தேவ்கன் நடிப்பில் ‘புஜ்’, அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘பிக் புல்’, அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘லக்‌ஷ்மி பாம்’, அலியா பட் நடிப்பில் ‘சதாக் 2’, விஜுத் ஜாம்வால் நடிப்பில் ‘குதா ஹஃபீஸ்’ மற்றும் குணால் கெமு நடிப்பில் ‘லூட் கேஸ்’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படங்கள் எப்போது ரிலீஸாகும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.

 

 

இந்நிலையில் இந்த படங்களின் அறிவிப்பு தொடர்பாக நடைபெற்ற புரோமோஷனில், விஜுத் ஜாம்வால் மற்றும் குணால் கெமு உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பயன்படுத்தாமல் மீதமுள்ள படங்களின் முன்னணி நடிகர்கள் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் இதை குறிப்பிட்டு விஜுத் ஜாம்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ பெரிய அறிவுப்புதான்... 7 படங்கள் ரிலீஸ் குறித்து வெளியாகும் அறிவிப்பில் 5 படங்களுக்குதான் ரெப்ரசண்டேஷ்ன் இருக்கிறது போல், மீதமுள்ள 2 படங்கள் அதுகுறித்து எந்தவித இன்விடேஷன் கூட பெறவில்லை. சுழற்சி இன்னும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.