Skip to main content

“அந்த தமிழ் தயாரிப்பாளரால் ஆறு மாதங்கள் அறுவெறுப்பாக உணர்ந்தேன்”- அஜித் பட நடிகை வருத்தம்!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். இதுதான் இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படம். அவர் பாலிவுட்டில் பல வருடங்களாக நடித்து வருகிறார். சிறந்த நடிகை என்று தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிருக்கும் மிஷன் மங்கல் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. அந்த படத்தின் புரோமோஷன் ஒன்றில் வித்யா பாலன் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகள் தேடியபோது தான் பட்ட கஷ்டத்தை சொல்லியிருந்தார்.
 

ajith nerkonda parvai

 

 

அதில், “தென்னிந்திய சினிமாவில் என்னை நிறையமுறை நிராகரித்துள்ளார்கள். அப்போது நிறைய மலையாள படங்களில் என்னை முதலில் கமிட் செய்துவிட்டு, எனக்கு பதிலாக வேறு ஒருவரை மாற்றினார்கள். தமிழ் சினிமா ஒன்றில் நடித்துகொண்டிருந்தேன். அதன்பிறகு படத்திலிருந்து என்னை நீக்கினார்கள். ஏன் திடீரென நீக்கினார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக நானும், எனது தந்தையும் விமானம் மூலம் சென்னைக்கு சென்று, அந்த தயாரிப்பாளரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் நான் நடித்த ஷாட்களை காட்டி, ஹீரோயின் போல இந்த பெண் இருக்கிறதா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று என்னையும், என் அப்பாவையும் பார்த்து கேட்டார். இந்த முடிவை முதலில் இயக்குனர்தான் எடுத்தார் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். என்னை நீக்கிவிட்டு வேறு ஒரு நபரை வைத்து படம் எடுக்கவும் அவர்கள் தொடங்கிவிட்டார்கள். என்பதை அறிந்த என்னுடைய தந்தை, தயாரிப்பாளரை அழைத்து என்ன பிரச்சனை என்பதை சொன்னால்தான் தெரியும் என்றார். அவருக்கு என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள இருந்தார்”
 

மேலும் அந்த பேட்டியில் பேசிய வித்யா பாலன், “அந்த நிகழ்விலிருந்து நான் என்னையே வெறுத்துவிட்டேன். என்னையே எனக்கு பிடிக்காமல் மிகவும் கேவலமாக என்னை நினைத்துகொண்டேன். ஆறு மாதங்கள் வரை என்னுடைய முகத்தை நான் கண்ணாடியில் பார்க்க தயங்கினேன். தொடக்கத்தில் என்னை இப்படி கேவலப்படுத்திய அந்த நபரை என் வாழ்நாளில் மன்னிக்கவே கூடாது என்று இருந்தேன். ஆனால், தற்போது அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துகொள்கிறேன். என்னையே என்னை மிகவும் நேசிக்க கூடியவளாய் மாற்றியிருக்கிறார்” என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கமலுக்கு ஜோடியாகும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்த முன்னணி இந்தி ஹீரோயின்?

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

vidya balan to pair kamalhaasan 234 novie

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்த நிலையில் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள படம் கமலின் 234வது படமாக உருவாகவுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்கிறார். 

 

இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இப்படம் மூலம் அவர் முதல் முறையாக கமலுடன் ஜோடி போடவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக அவர் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

 

 

Next Story

மகள் விசயத்தில் ‘விஸ்வாசம்’ கேரக்டர் தான்; அஜித்தை புகழ்ந்து தள்ளிய அபிராமி வெங்கடாசலம்!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 Abhirami venkatachalam interview

 

‘இரு துருவம்’ வெப் சீரிஸில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலம் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்; அப்போது அவர் பல சர்ச்சையான விசயங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.

 

'இரு துருவம்' வெப் சீரிஸ் குறித்த அனுபவங்கள்?

நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கு முன்பே இரு துருவம் வெப் சீரிசில் கமிட்டானேன். அதுதான் என்னுடைய கரியர் தொடங்கிய நேரம். நல்ல ஒரு கிரைம் திரில்லர் அது. முதல் சீசனில் எப்படியாவது நான் செலக்ட் ஆகிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம்.

 

நிஜமான அபிராமியை எப்போதாவது மிஸ் செய்கிறீர்களா?

நான் மனதளவில் பலமான ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. நிச்சயம் பல விஷயங்களில் நான் மாறியிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே வளர்ச்சியாகத் தான் தெரிகின்றன.

 

இந்த இன்டர்நெட் உலகில் நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அதை வளர்ச்சிக்கான அடிப்படையாகத் தான் பார்க்கிறேன். அடிப்படையில் எனக்கு ஜனநாயகம் பிடிக்கும். இங்கு உரையாடல் அவசியம். எனவே மனதுக்குத் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. சிவராத்திரியில் நடனமாடியது, டாட்டூ குத்தியது எல்லாம் சர்ச்சையாகின. ஆனால் அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்மால் மூச்சுவிடக் கூட முடியாது. சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக என்னால் வாழ முடியாது.

 

இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

அனைத்து உறவுகளுமே இங்கு முக்கியம் தான். அவர்கள் தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக்குகின்றனர். நண்பர்களுக்காக நான் எதையும் செய்வேன். என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று உண்மையில் விரும்பிய ஒரு இதயம் என்னுடைய பாட்டி. 'ரட்சகன்' படத்தில் வரும் சுஷ்மிதா சென் கேரக்டர் தான் நிஜ வாழ்க்கையில் நான். எனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நெகட்டிவ் மனிதர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. 

 

நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போது அஜித்திடம் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அஜித் சார் மிகவும் எளிமையானவர். அமைதியானவர். அனைவரையும் மதிக்கக் கூடியவர். எல்லோருடனும் சமமாகப் பழகுவார். அவருடைய மகள் மீது அவர் கொண்டுள்ள அன்பு என்னை வியக்க வைத்தது. 'விஸ்வாசம்' படத்தில் நடித்த கேரக்டர் போல் தான் நிஜ வாழ்க்கையிலும் அவர் தன் மகள் மீது அன்பு செலுத்துகிறார். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் அது.