Skip to main content

நாவலைத் தொடர்ந்து சிறுகதையைப் படமாக்கும் வெற்றிமாறன்!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

vetrimaran - soori

 

'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன், நகைச்சுவை நடிகர்  சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து 'வாடி வாசல்' படத்தையும் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. கரோனா தொற்று பாதிப்பால், படப்பிடிப்புகள் தள்ளிப்போன நிலையில், வெற்றிமாறன் அடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என ரசிகர்களிடையே குழப்பம் எழுந்தது. 

 

இந்தநிலையில், வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால், வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றிவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சூரியை வைத்து, வெற்றிமாறன் இயக்கும்  படம், ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை, டிசம்பர் மாதம் 8 -ஆம் தேதி, சத்தியமங்கலம் வனப்பகுதியில்  தொடங்கி, 40 நாட்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வெற்றிமாறன் ஏற்கனவே, 'லாக்அப்' நாவலை அடிப்படையாக வைத்து 'விசாரணை' படத்தையும், 'வெக்கை' நாவலை அடிப்படையாக வைத்து 'அசுரன்' படத்தையும் இயக்கியுள்ளார். அதன்படி, இதுவரை நாவல்களைப் படமாக்கிய வெற்றிமாறன், முதல் முறையாகச் சிறுகதையைப் படமாக்குகிறார். இதன் பிறகு, சூர்யாவை வைத்து இயக்கவுள்ள 'வாடிவாசல்' படம், அதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.