Skip to main content

பிரபல நடிகையைக் கொடூரமாகக் கொன்று ஆற்றில் வீசிய மகன் - வெளிவந்த பரபரப்பு சம்பவம்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Veteran TV actress Veena Kapoor passed away case

 

இந்தியில் பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தவர் நடிகை வீணா கபூர். மேலும், சில திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 6 ஆம் தேதி இறந்துள்ளார். வீணா கபூருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். மற்றொரு மகன் சச்சின் என்பவர் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் தனது தாயுடன் மும்பை ஜூஹூ பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

 

கடந்த 6 ஆம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன் வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். போனை யாருமே எடுக்கவில்லை. அதனால் உறவினருக்குச் சொல்லி, உடனே வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கோரியுள்ளார். உறவினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து போலீசில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் கபூரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் 74 வயதான நடிகை வீணா கபூரை 43 வயதான அவரது மகன் சச்சின் கபூர் பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், நடிகை வீணா கபூருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து இருந்துள்ளதாகவும், அதை சச்சின் கேட்டதற்கு வீணா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக சச்சின் கபூர், வீணா கபூரை கொன்றதாகவும், உடலை வீட்டின் உதவியாளர் லாலு குமார் மண்டல் என்பவரின் உதவியோடு ஆற்றில் வீசியதாகவும் தெரியவந்துள்ளது. 

 

இந்நிலையில், வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் கபூர் மற்றும் வீட்டின் உதவியாளர் லாலு குமார் மண்டல் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.