var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படம் இப்போது ஆரம்பிக்கும், அப்போது ஆரம்பிக்கும் என அவ்வப்போது தகவல்கள் வெளியான நிலையில் மாநாடு படத்திற்கான கால்ஷீட் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது ட்வீட் செய்துள்ளார். ''மாநாடு படத்தில் தம்பி சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவினை மரியாதை நிமித்தமாக ஏற்றுக் கொள்கிறேன். அனைவருக்கும் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.