சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி வருகிறார். அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின்க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகள்அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'மன்மத லீலை' படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.