Skip to main content

அமெரிக்காவில் ஷோ ரத்து; ஆந்திராவில் தீ விபத்து - அடாவடியில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

 Veera Simha Reddy celebration fire acident in theatre

 

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த வகையில் அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக பாலகிருஷ்ணா திரையில் தோன்றும் போது ஆரவாரம் செய்து கூச்சலிட்டபடி பேப்பர் துண்டுகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அங்குள்ள திரையரங்கில் இதுபோன்று கொண்டாடுவது முதல் முறை எனச் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் திரையரங்கு நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறையினர் வந்து இந்த கொண்டாட்டம்  எங்கள் நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமானது என்று கூற உடனே ரசிகர்கள் அமைதியாக வெளியேறினார்கள். இந்த சம்பவம் அங்கு சிறிது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சியா திரையரங்குகளில் இது போன்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டதால் பல காட்சிகள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சம்பவமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு 'வீர சிம்ஹா ரெட்டி' ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் திரையில் திடீரென தீப்பிடித்தது. உற்சாகத்தில் சில ரசிகர்கள் தீ வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்த மற்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநர் மற்றும் நடிகர் கே. விஸ்வநாத் காலமானார்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Director and actor K. Viswanath passed away

 

மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

 

1965 ஆம் ஆண்டில் அறிமுகமான கே.விஸ்வநாத் தான் இயக்கிய முதல் படமான ‘ஆத்ம கவுரவம்’ படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை வென்றார். தொடர்ந்து தமிழிலும் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, லிங்கா, உத்தம வில்லன் எனப் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

மேலும் 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகள், 10 மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத் இல்லத்தில் ஓய்வில் இருந்த விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Next Story

4வது திருமணத்திற்கு 3வது மனைவி கொலை மிரட்டல் - கோர்ட்டுக்கு போன பிரபல நடிகர்

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

actor naresh actress pavithra issue

 

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'அயோக்யா', 'க/பெ ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷை காதலித்து வந்தார். 

 

நடிகர் நரேஷ், இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோது நரேஷின் 3வது மனைவி ரம்யா அவர்களை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று நடிகர் நரேஷும் நடிகை பவித்ராவும் திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ மீண்டும் பேசும் பொருளாக மாற நரேஷின் முன்றாவது மனைவி ரம்யா, எங்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று நிலையில் எப்படி அவர் நான்காவது திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இந்த நிலையில் நடிகர் நரேஷ்  குடும்ப நல நீதிமன்றத்தில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், "எனக்கும் எனது மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு, 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. பின்பு விவாகரத்து எடுக்க முடிவே செய்து அவரிடம் விவாகரத்து கேட்டேன். விவாகரத்து கொடுக்க பணம் கேட்டார். அந்த பணத்தை கேட்டு மிரட்டவும் செய்தார். பணம் மற்றும் சொத்துக்காக ரம்யா என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.