Skip to main content

“18 வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை”- வேதாளம் வில்லன்

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

கடந்த 2000ஆம் ஆண்டு பாலிவுட்டில் சாம்பியன் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார் ராகுல் தேவ். தன்னுடைய முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த வில்லனுக்கான பரிந்துறையில் இடம்பெற்றார்.
 

rahul dev

 

 

இதனைதொடர்ந்து விஜய்காந்த் நடிப்பில் உருவான நரசிம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். இதன் பின் அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார் ராகுல் தேவ்.

51 வயதை எட்டியுள்ள ராகுல் கடந்த 1998ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன்பின் ரீனா புற்றுநோயால் 2009ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவர்கள் இருவருக்கும் சித்தார்த் என்ற மகன் உள்ளார். ரீனா இறந்த பின்னர் 11 ஆண்டுகள் தனியாளாக தன் மகனை வளர்த்து வந்தார் ராகுல்.

இந்த நிலையில் ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. முக்தா, தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் ஜோடியாக நடித்தவர். இவருடைய வயது 33. ராகுலுக்கும் முக்தாவுக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது. முக்தாவுடன் ஏற்பட்டுள்ள காதலை ராகுல் தேவ் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த காதல் குறித்து ராகுல் கூறும்போது, “எனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். ஒரு திருமண விழாவில் இருவரும் சந்தித்து நட்பானோம். அதன்பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களுக்கு இருக்கும் 18 வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.