Skip to main content

'அந்த படம் இன்னமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை' - விஷாலை வறுத்தெடுத்த வசந்தபாலன் !

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
vasantha balan

 

கந்துவட்டி கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பொது நலன் கருதி’ படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது....

 

 

"சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது... விஷால் அணி இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்... சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கன்னட படமான கே.ஜி.எப் படம் இன்னமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை. மற்ற மொழி படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வருவது கடினமாக உள்ளது. அது ஏன் இங்கு இல்லை... பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்" என்று ஆவேசமாக பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இருளில் இருக்கும் நகரோடிகள் மீது சிறு வெளிச்சம் பாய்ச்சிட வேண்டும்"  - இயக்குநர் வசந்தபாலன் அறிக்கை 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

director vasanthabalan talk about jail movie

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு  அறிவித்துள்ளது.

 

ad

 

இந்நிலையில் 'ஜெயில்' படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," நிலம்தான் வாழ்வு, நிலம்தான் அடையாளம், நிலம்தான் அதிகாரம், நிலம்தான் போராட்டம்,  நிலம்தான் யுத்தம், நிலம்தான் இனவிடுதலை, நிலம்தான் வரலாறு, நிலம்தான் சகலமும், நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதை பரிபூரணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களில் இருந்து நம்மை முற்றாக துரத்தி அடிக்க விரும்புகிறார்கள் என்கிறார் கவிஞர் லிபி ஆரண்யா.

 

சென்னையில் மட்டும் ஐந்தரை லட்சம் மக்கள் மறுகுடியமர்வில் தங்களின் கல்வி, வேலை, வாழ்வாதாரம் ஆரோக்கியத்தை இழந்துள்ளனர். இந்த ஐந்தரை லட்சம் சென்னையில் மட்டும் என்றால் உலக அளவில் யோசித்துப் பாருங்கள். நிலம் மற்றும் அதன் மீதான நமது வாழ்வு குறித்தும், அதன் விழுமியங்கள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  நிலத்தோடு தொடர்புள்ள வாழ்வின் சில அறங்கள் மற்றும் மனித இயல்புகள் புலம் பெயர்ந்த நிலத்தோடு தொடர்பற்ற வாழ்வில் சிதைந்து போகும் துயரை இந்த படம் பேசுகிறது. அடித்தட்டு மக்களை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதை  மட்டும் நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா அல்லது அவனை குற்றவாளியாக ஆக்குகின்ற அமைப்பை, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா? நான் எப்போதும் ஆணிவேரை நோக்கி என் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இதைத் தாண்டி படத்தில் இருக்கும் காதல், நட்பு, ஆக்ஷன், போதைப்பொருள்  இவையெல்லாம் ஒரு சுவாரசியமான கதையை சொல்வதற்காக பயன்படுத்திக்கொண்ட காரணிகள் மட்டுமே. ஆகையால் அவை மீது பயணம் செய்யாமல் வலுக்கட்டாயமான மறுகுடியமர்வின் சாதக பாதகங்களைப் பற்றி தீவிரமாக விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருளில் புதைந்து கிடக்கும் நகரோடிகளின் மீது ஒரு சிறு வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'ஜெயில்'... வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

jail movie confirm release on dec9

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையிலும், ‘ஜெயில்’ படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.  இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

 

இதனிடையே படத்தின் தயாரிப்பாளருக்கும், வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'ஜெயில்' படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

 

ad

 

இந்நிலையில், ‘ஜெயில்’ படம் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை எம்.எஸ்.எம். ஃபிலிம் டிரேடர்ஸ் நிறுவனம் சார்பில் எம். செண்பகமூர்த்தி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.