சேவ் சக்தி அமைப்பு, சமூக தொண்டு என சமூக அக்கைறையில் படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி 2, விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதியதாக 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இப்படத்தை கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஜெர்னலிஸ்டாக மாறும் வரலட்சுமி சரத்குமார்
சார்ந்த செய்திகள்
Next Story
"எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள்
Next Story
வரலட்சுமி சரத்குமாரின் 'எச்சரிக்கை' !
நெஞ்சில் துணிவிருந்தால், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டியதுடன் சேர்த்து படத்தையும் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல லஷ்மி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம், AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இப்படம் குறித்து பேசும்போது.... "இது கிரைம் திரில்லர் படம். 'எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.
சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். 'கிட்நாப்' பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மட்டுமல்லாமல் படத்தின் மொத்த உரிமையையும் வாங்கி ரிலீஸ் செய்கிறார். இம்மாதம் 24ஆம் தேதி படம் வெளியாகிறது" என்றார். மா, லஷ்மி குறும் படங்களின் நேர்த்தியை கேள்விப்பட்ட அறம், குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சார்ஜுன் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்தையும் தயாரித்து முடிற்றிருக்கிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.