Advertisment

"உடனே ஒரு குரூப் வந்து எங்களுக்கே சாப்பாடு இல்லை, தண்ணீ இல்லைனு சொல்ல வருவாங்க.." - கோரிக்கை வைத்துவிட்டு கொதித்த வரலட்சுமி!

கரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக நடிகை வரலட்சுமி வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை நேற்று விடுத்திருந்தார். அதில், " எல்லாருக்கும் வணக்கம், நீங்க எல்லாம் வீட்டில் தான் இருப்பீங்க என்று நம்புறேன். நான் வீட்டில் தான் இருக்கேன். ஒரு இரண்டு மூன்று விஷயங்கள் சொல்லணும்னுநினைச்சேன். அதை மட்டும் நான் சொல்லிடுறேன். இதை ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க, இல்லாட்டி பிரச்சனை இல்லை. முதல்ல ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்காங்க, கரோனாவது, டேஷ்ஷாவதுனு, நான் அவங்ககிட்ட தான் பேசணும்னு நினைக்கிறேன். கரோனா வைரஸ் யாருக்கு வேணா வரலாம். இவர்களுக்குத்தான் வரும் என்று இல்லை. இதை நாம் முதல்ல ஒழுங்கா புரிஞ்சிக்கணும். லாக் டவுன் அன்னைக்கு 27 சதவீதம் பேர்தான் வீட்டில் இருந்திருகோம். மத்த பேர் வீட்டில்தான் சுத்திக்கிட்டு இருந்திருக்கோம். இதோட சீரியஸ் யாருக்கும் புரிய மாட்டேங்குது. கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணுங்க... இந்தியா சின்ன ஊர் கிடையாது, 130 கோடி பேர் இருக்கிறோம். அரசாங்கம் சொல்கின்ற வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்" என்று அந்த வீடியோவில் வரலட்சுமி தெரிவித்திருந்தார்.

Advertisment

oi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் இன்றும் அதுதொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், நிறைய பேரு அவங்களுடைய செல்லப் பிராணிகளை தெருவில் விட்டுச் செல்கிறார்கள். தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள். அதுவும் வாயில்லா ஜீவன்கள்தான். அதுங்களுக்கும் உணவு தேவை. யாரும் அவர்களை அநாதையாக்கி செல்லாதீர்கள். நம்ம தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு, தண்ணீர் வையுங்க. இப்ப இதுக்கு உடனே ஒரு குரூப் வந்து எங்களுக்கே சாப்பாடு இல்லை, தண்ணீ இல்லைனு சொல்ல வருவாங்க. நான் எல்லாரையும் சொல்லல. யாரால் முடியுதோ அவர்கள் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe