Advertisment

“அப்படித்தான் வாழ்கிறோம் என்றால், கரோனாவால் சாகத் தகுதியுடையவர்கள்...”- வரலட்சுமி காட்டம்!

varalakshmi

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றுமொரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாகத் தகுதியுடையவர்கள் தான். அதுதான் மனிதர்களாகிய நமக்குக் கடவுளின் பதிலாகவும் இருக்கும்.நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்....” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe