varalakshmi sarathkumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சண்டக்கோழி 2'. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியபோது... "சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வேலை பார்க்கும்போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி 2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது" என்றார்.