Skip to main content

“விவாதம் செய்வதை நிறுத்துங்கள்... பயணம் தொடரும்” -வனிதா விஜயகுமார்

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

vanitha

 

 

கடந்த ஜூன் மாதம் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன்பின் இருவரும் இணைந்து அவர்களின் யூ-ட்யூப் சேனலில் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்கள். திடீரென இருவரின் உறவிலும் விரிசல் விழ, பிரிந்துவிட்டனர். அப்போது மிகவும் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் வனிதா. இந்நிலையில் மீண்டும் பீட்டர் பாலுடன் சமரசமாகுவதற்காக வனிதா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.

 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் வனிதா. அதில், “நான் மீண்டும் இணைந்து வாழ முயன்றதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. மாயையிலிருந்து வெளியே வாருங்கள். என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருக்கிறேன்.

 

பிரிந்தது குறித்து நான் கடைசியாக வீடியோ வெளியிட்டதற்கு பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர், அவரது முடிவை எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் வாழ முடியாது. ஆனால் நான் சொன்னது போல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என யாருமே வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.

 

காதலில் என்னுடைய அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து அதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். எனவே இதற்கு மேல் யூகிப்பதை, விவாதம் செய்வதை நிறுத்துங்கள். அவரோடு எனக்கு சட்டரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன். அத்தனை அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. பாசிட்டிவ்வான சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

Next Story

"தென்னிந்தியாவின் ஷாருக்கான் அவர்" - வனிதா புகழாரம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

vanitha speech in aneethi press meet

 

இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "நான் என் கம்பேக்கிற்காக சில படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகிறது. ரொம்ப பெருமையா இருக்கு. வசந்தபாலன் சார் ஒரு மாஸ்டர் ஃபிலிம்மேக்கர். அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கார். அவருக்கே வில்லன் நான். அவருடைய குரலுக்கு எல்லாரும் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஸ்க்ரீனில் பார்க்கும் போது ஷாருக்கானை பார்த்தது போல் இருந்தது. அவர்தான் தென்னிந்தியாவின் ஷாருக்கான். அந்த வளர்ச்சி கண்டிப்பாக அவரை வந்து சேரும்" என்றார்.