Skip to main content

மாலையும் கழுத்துமாக வனிதா விஜயகுமார்! ரசிகர்கள் குழப்பம்!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

gfshehdehe


சர்ச்சைகளுக்குப் பேர்போன நடிகை வனிதா விஜயகுமார் இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பிக்பாஸ் 3 மூலம் பிரபலமான இவர், சென்ற ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் முடிந்து சில தினங்களிலேயே வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் உலா வந்தது. இதற்கு, “நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என வனிதா விஜயகுமார் விளக்கமளித்தார்.

 

இந்நிலையில் தற்போது நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடந்துவிட்டதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்லியும் கமன்ட் செய்துவருகின்றனர். மேலும் சிலர், இது படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் பதிவிடுகின்றனர். இன்னும் சில ரசிகர்கள், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாததால் குழம்பிப் போயுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

Next Story

"தென்னிந்தியாவின் ஷாருக்கான் அவர்" - வனிதா புகழாரம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

vanitha speech in aneethi press meet

 

இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "நான் என் கம்பேக்கிற்காக சில படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகிறது. ரொம்ப பெருமையா இருக்கு. வசந்தபாலன் சார் ஒரு மாஸ்டர் ஃபிலிம்மேக்கர். அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கார். அவருக்கே வில்லன் நான். அவருடைய குரலுக்கு எல்லாரும் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஸ்க்ரீனில் பார்க்கும் போது ஷாருக்கானை பார்த்தது போல் இருந்தது. அவர்தான் தென்னிந்தியாவின் ஷாருக்கான். அந்த வளர்ச்சி கண்டிப்பாக அவரை வந்து சேரும்" என்றார்.