Skip to main content

நமிதா, குஷ்பு வரிசையில் வனிதா! பாஜகவின் அதிரடி பிளான்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

vanitha


ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு கருத்தையோ அறிக்கையையோ வெளியிட்டுத் தன்னைப் பற்றிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதேபோல படவாய்ப்புகள் குறைந்தாலும் திரையுலகில் வனிதா விஜயகுமாரின் பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும். 

 

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, பீட்டர் பாலை திருமணம் செய்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார் நடிகை வனிதா. பீட்டர் பாலுடன் திருமணத்திற்குப் பின் காவல் நிலையத்தில் புகார், வழக்கு என பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்கள் அமைதியாக இருந்த நிலையில், பீட்டர் பாலின் செயல்பாடுகள் குறித்து, கருத்துத் தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

மோடி பிரதமரான பின்பு, ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரபலங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க இல்லாவிட்டாலும், தன்னைப் பற்றிய விவாதம் நடைபெறும் சூழலை அந்தக் கட்சி உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கங்கை அமரனை கட்சியில் இணைத்ததை தொடர்ந்து பல திரை நட்சத்திரங்களையும் இணைத்து வருகிறது. ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் மாநில அளவில் பொறுப்பிலும் உள்ளனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் குஷ்பு. அப்போதிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

 

இந்நிலையில்தான், வனிதா விஜயகுமாரை இணைக்க பா.ஜ.க கட்சித் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விரைவில் அவர் இணைவார் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க பொதுக் கூட்டங்கள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில், பிரச்சாரப் பீரங்கியாக வனிதாவை களமிறக்க பா.ஜ.க அதிரடி பிளான் போட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை வனிதா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

Next Story

"தென்னிந்தியாவின் ஷாருக்கான் அவர்" - வனிதா புகழாரம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

vanitha speech in aneethi press meet

 

இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "நான் என் கம்பேக்கிற்காக சில படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகிறது. ரொம்ப பெருமையா இருக்கு. வசந்தபாலன் சார் ஒரு மாஸ்டர் ஃபிலிம்மேக்கர். அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கார். அவருக்கே வில்லன் நான். அவருடைய குரலுக்கு எல்லாரும் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஸ்க்ரீனில் பார்க்கும் போது ஷாருக்கானை பார்த்தது போல் இருந்தது. அவர்தான் தென்னிந்தியாவின் ஷாருக்கான். அந்த வளர்ச்சி கண்டிப்பாக அவரை வந்து சேரும்" என்றார்.