Vairamuthu tweet

ஊர்வசி ,பார்வதி திருவோத்து ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் 'உள்ளொழுக்கு'. படத்தில் பெரும் வெள்ளத்திற்கிடையில் இளம் விதவை மற்றும் அவரது மாமியார் ஆகியோரின் ஒற்றுமையை அச்சுறுத்தும் விதமாக அவர்கள் மனதில் நீண்ட காலமாக புதைந்துள்ள இரகசியங்களை எதிர்கொள்கின்றர். இந்த ஸ்டோரி லைன் -ஐ கதைக்களமாக கொண்டு கிறிஸ்டோ டாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2 தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இப்படம் குறித்த தனது விமர்சனத்தை பகிர்துள்ளார்.அதில்,

“ஒரு மலையாளப்

Advertisment

படம் பார்த்தேன்

'உள்ளொழுக்கு'

மிச்ச இரவு

Advertisment

என் தூக்கத்தைத்

துரத்திவிட்டது

வெற்றாரவாரங்களும்

தொழில்நுட்பத் துயரங்களும்

சூழக் கிடக்கும்

சினிமாச் சிரமங்களுக்கு மத்தியில்

ஒப்பனை செய்யாத

உண்மை ஓவியம்

வாழ்வின் காயத்திலிருந்து

வழியும் சூடான ரத்தம்

தாலி அறுக்குமுன்பே

தடம் மாறிய மருமகளுக்கும்

அவளுக்குத் தாயாகிப்போன

மாமியாருக்குமிடையே

நிலவும் உணர்ச்சியொழுக்கு

"கலை உலகில்

அறிந்த வரையில்

அறிவார்ந்த பெண்கள்

இருவர்" என்றார் கமல்

" யார்? யார்?" என்றேன்

" ஒருவர் ஊர்வசி;

இன்னொருவர்

கோவை சரளா"

அந்த ஊர்வசி

அறிவைத் தன்

கட்டுப்பாட்டில் கட்டிவைத்துவிட்டு

உணர்ச்சிக்குத்

தேவையான அளவு

உப்பிட்டு நடித்த படம்

பார்வதி என்ற பெண்ணை

இப்போது தான் பார்க்கிறேன்.

வாழ்வு வலி இரண்டையும்

எடுத்து உடுத்து நடித்திருக்கிறார்

படத்தின் முடிவில்

கேரளம் தண்ணீரில்;

நாம் கண்ணீரில்

இயக்குனரை வாழ்த்துகிறேன்

இப்படி ஒரு படம்

நடிகர்களுக்கு

மீண்டும் வாய்க்காது;

நமக்கும்தான்” என்று பாராட்டியுள்ளார்.