Advertisment

"என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!" - வைரமுத்து உருக்கம்!

cacfSAC

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"வருந்துகிறேன் நண்பா!

திரையில்

ஒளிகொண்டு

சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை

ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்

எத்தனையோ பாடல்களை

ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ

உனக்கான இரங்கல்பாட்டை

எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா

கேவிக்கேவி அழுகிறது

கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்

இனி நீ" என பதிவிட்டுள்ளார்.

kv anand Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe