srhrs

இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கிடையே சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்து வேலையில்லாமல் கஷ்டப்படும் ஃபெப்சி தொழிலாளர்கள் 500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..

Advertisment

Advertisment

''ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம்

கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு

அரிசிப் பைகளை ஒப்படைத்தேன்.

எங்கள் பாட்டாளி மக்கள்

கொஞ்சம் பசியாறட்டும்''

எனப் பதிவிட்டுள்ளார்.