சென்னையைச் சேர்ந்த நக்ஷா சரண், பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படமான 'ரோஜா' படத்தில் இடம்பெற்றுள்ள 'புது வெள்ளை மழை' எனும் பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
யூ-டியூபில் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலைக் கண்ட கவிஞர் வைரமுத்து, நக்ஷா சரணை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
'புது வெள்ளை மழை' பாடல் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறும் நக்ஷா சரண், இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று எனவும் கூறுகிறார்.