gesg

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கிவரும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக நேரடியாக வங்கிகளில் பணம் செலுத்தும் முறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து சமூகவலைத்தளத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். அதில்..

Advertisment

Advertisment

''உரிமை மின்சாரத்தை நீக்கி

உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...

அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்''

எனப் பதிவிட்டுள்ளார்.