Advertisment

"அதிகத் தொலைவில்லை ஆஸ்கர்..." வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்!

vairamuthu

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஒருவாரமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வந்தது. விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

Advertisment

விழாவின் முடிவில், ‘க/பெ ரணசிங்கம்’,'என்றாவது ஒருநாள்’, 'சீயான்கள்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வென்றன. இது குறித்து கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், " 'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, 'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது. விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe