கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த வடிவேலு இப்படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு பூஜையுடன் ஆர்மபித்த இதன் படப்பிடிப்பு சில காரணங்களால் பின்னாளில் நிறுத்த பட்டது. நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுப்பதாக கூறி தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். பின்னர் நடிகர் சங்கம் வடிவேலுக்கு இரண்டு கடிதங்கள் எழுதி விளக்கம் கேட்டு இருந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சங்கத்துக்கு வடிவேல் எழுதியுள்ள கடிதத்தில், "இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க 1-6-2016-ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். ஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன். இந்த நிலையில் என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அத்துடன் கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். நான் நடித்து தர மறுத்து இருந்தால் பட நிறுவனம் ஏன் டிசம்பர் 2016-க்குள் புகாரை தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்த படத்தில் நாசர் நடிப்பதால் நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
24ஆம் புலிகேசி குறித்து வடிவேலு எழுதிய லெட்டர்!
சார்ந்த செய்திகள்
Next Story
யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி...? எதற்கு இவ்வளவு மீம்ஸ்..? ஒரு ருசிகர ரிப்போர்ட் !
விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் ஒரு சமூகவலைத்தள க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை ஒருவர் பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது அண்ணன் மகன் ரமேஷ் கண்ணா, அவர் தலையில் போட்டுவிட்டார். இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது இந்த #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்.
இதைவைத்துதான் தற்போது நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு காண்டிராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் காண்டிராக்டராக நடித்திருப்பார். ஒரு காட்சியில் சுவற்றில் உள்ள ஆணிகளை பிடுங்க வடிவேலு ரமேஷ் கன்னாவிற்கு உத்தரவு பிறப்பிற்பார். ரமேஷ் கண்ணா ஒரு படிக்கட்டு மேல் ஏறி ஆணிகளை பிடிங்கிக்கொண்டிருக்கும்போது கை தவறி சுத்தியல் கீழே நிற்கும் வடிவேலு தலையில் விழுந்து, அவர் மயக்கம் அடைந்து விடுவார். பிறகு சிறுது நேரம் கழித்து வடிவேலுவுக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டு கண்விழித்து விடுவார். இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் வடிவேலுவின் காமெடிகள் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
வடிவேலு பேய் மாமாவா...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு !
'மெர்சல்' படத்திற்கு பிறகு '24ஆம் புலிகேசி' பட பிரச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு அடுத்ததாக முழுநீள காமெடி படமான 'பேய் மாமா' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதோடு வடிவேலு படம் பொறித்த போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருந்தும் ரசிகர்கள் மத்தியில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சிதம்பரத்தின் என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி படங்களில் ஏற்கனவே வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.